காதல் என்பது மண்ணானால் – அதில்
மின்னும் பொன் துகள் நீயன்றோ ?
காதல் என்பது நெருப்பானால் – அதில்
துடித்திடும் திரியும் நானன்றோ ?காதல் என்பது காற்றானால் – அதில்
தூவிடும் மகரந்தம் நீயன்றோ?
காதல் என்பது மலையானால் – அதில்
பொழிந்திடும் மழையும் நானன்றோ ?காதல் என்பது நதியானால் – அதில்
பொங்கிடும் நுரையும் நீயன்றோ ?
காதல் என்பது கடலானால் – அதில்
அலைபோல் தவிப்பது நானன்றோ ?காதல் என்பது மதுவானால் – அது
தந்திடும் போதை நீயன்றோ ?
காதல் என்பது தேனென்றால் – அதைச்
சேர்ந்திடும் தேனி நானன்றோ ?காதல் என்பது நீயென்றால் – உனைத்
தொழுதிடும் பக்தன் நானன்றோ ?
காதல் என்பது நானென்றால் – என்
உயிரின் ஸ்வாஸம் நீயன்றோ ?

