முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?

உன்னைக்   காண       ஓடி         வந்தேன்
என்னை     நானே       தந்து        விட்டேன்
வள்ளிக்     கணவன்     துள்ளி      நின்றான்
வள்ளிக்     கிழங்கென   அள்ளிக்     கொண்டான்
என்னிரு     விழியில்    பள்ளி       கொண்டான்
பன்னிரு     கரத்தால்    பின்னிக்     கொண்டான் !

பழனிப்      பழமாய்     பிசைந்து    விட்டான் 
பழமுதிர்    சோலையாய் மாற்றி      விட்டான் 
செந்தூர்     அலையில்   மிதக்க  வைத்தான் 
தணிகை    மலையில்   தவழ   வைத்தான் 
சுவாமி      அவனைச்   சுற்றி       வந்தேன்
குன்றத்து    வலையில்   சிக்கிக்       கொண்டேன்

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?