முருகா முருகா வருவாயா?
திருவாய் திறந்து தருவாயா?உன்னைக் காண ஓடி வந்தேன்
என்னை நானே தந்து விட்டேன்
வள்ளிக் கணவன் துள்ளி நின்றான்
வள்ளிக் கிழங்கென அள்ளிக் கொண்டான்
என்னிரு விழியில் பள்ளி கொண்டான்
பன்னிரு கரத்தால் பின்னிக் கொண்டான் !பழனிப் பழமாய் பிசைந்து விட்டான்
பழமுதிர் சோலையாய் மாற்றி விட்டான்
செந்தூர் அலையில் மிதக்க வைத்தான்
தணிகை மலையில் தவழ வைத்தான்
சுவாமி அவனைச் சுற்றி வந்தேன்
குன்றத்து வலையில் சிக்கிக் கொண்டேன்முருகா முருகா வருவாயா?
திருவாய் திறந்து தருவாயா?

