
பல்லுயிர் காத்திடும் பகலவனாய் வாஎன்தாயே!
பாலைப் புகட்டிடும் அன்னையாய் வாஎன்தாயே!
பிள்ளைகள் சிரித்திடும் பொம்மையாய் வாஎன்தாயே!
பீடுடைய பெருமானை உடன்அழைத்து வாஎன்தாயே!
புல்லாய்ப் பிறந்தாலும் பனித்துளியாய் வாஎன்தாயே!
பூவண்டாய் இருந்தாலும் தேன்துளியாய் வாஎன்தாயே!
பெண்ணாய் என்தோளில் துஞ்சிவிட வாஎன்தாயே!
பேரனாய் பேத்தியாய் கொஞ்சிட வாஎன்தாயே!
பையனாக` வந்தென்னை கரையேற்ற வாஎன்தாயே!
பொங்கிவரும் மாங்காட்டில் தங்கிவிட வாஎன்தாயே!
போகங்கள் விளைந்திட மேகமாய் வாஎன்தாயே!
பௌர்ணமி இரவினிலே வெளிச்சமாய் வாஎன்தாயே!
ப்ரியமுடன் அழைக்கின்றேன் காத்திடுவாய் எனை நீயே!
