image

(email இல் வந்தது)

ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும்

 வார்த்தைகளால்வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள 

அயோத்திஅரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு 

அரணாக அரசனின்அம்சமாக அனுமனும் அவதரித்ததாக

அறிகிறோம்அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த 

அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,

அன்பழகன்,அன்பர்களைஅரவணைத்து அருளும் 

அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை 

அரசவையில்அரசனின் அரிய வில்லை அடக்கி, 

அன்பும்அடக்கமும் அங்கங்களாகஅமைந்த அழகியை

அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை 

அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !

அக்கைகேயிஅசூயையால் அயோத்தி அரசனுக்கும்

அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு

அனுப்பினாள். அங்கேயும் அபாயம்!

அரக்கர்களின் அரசன்,அன்னையின் அழகால் அறிவிழந்து

 அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் 

அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. 

அயோத்திஅண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் 

அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் 

அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து,

அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த

 அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக 

அரியணையில் அமர்த்தினர். 

அடுத்துஅன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில்

 அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.அனுமன், 

அலைகடலை அலட்சியமாகஅடியெடுத்துஅளந்து 

அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,

அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து

அண்ணலின்அடையாளமாகிய அக்கணையாழியை 

அவளிடம்அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற 

அவதிகள்அநேகமாகஅணைந்தன.அன்னையின் 

அன்பையும்அருளாசியையும் அக்கணமே அடைந்தான் 

அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து ,

அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு 

அக்கினியால்அழித்த அனுமனின் அட்டகாசம் , 

அசாத்தியமானஅதிசாகசம். அனந்தராமன்அலைகடலின் 

அதிபதியைஅடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,

அக்கரையை அடைந்தான். 

அரக்கன் அத்தசமுகனை அமரில்அயனின்

அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் 

அர்ப்பணித்த அன்னைஅவள் அதி அற்புதமாய் அண்ணலை 

அடைந்தாள். அன்னையுடன்அயோத்தியை அடைந்து

அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் . 

அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேய 

அடுக்கடுக்காகஅமைந்ததும் அனுமனின் அருளாலே!

image

       

(நன்றி …நன்றி …நன்றி )