
(email இல் வந்தது)
ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும்
வார்த்தைகளால்வடிவமைக்கப் பட்டுள்ளது.
அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள
அயோத்திஅரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு
அரணாக அரசனின்அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த
அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,
அன்பழகன்,அன்பர்களைஅரவணைத்து அருளும்
அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை
அரசவையில்அரசனின் அரிய வில்லை அடக்கி,
அன்பும்அடக்கமும் அங்கங்களாகஅமைந்த அழகியை
அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை
அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயிஅசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
அனுப்பினாள். அங்கேயும் அபாயம்!
அரக்கர்களின் அரசன்,அன்னையின் அழகால் அறிவிழந்து
அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின்
அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை.
அயோத்திஅண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால்
அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில்
அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து,
அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த
அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக
அரியணையில் அமர்த்தினர்.
அடுத்துஅன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில்
அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.அனுமன்,
அலைகடலை அலட்சியமாகஅடியெடுத்துஅளந்து
அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,
அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து
அண்ணலின்அடையாளமாகிய அக்கணையாழியை
அவளிடம்அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற
அவதிகள்அநேகமாகஅணைந்தன.அன்னையின்
அன்பையும்அருளாசியையும் அக்கணமே அடைந்தான்
அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து ,
அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு
அக்கினியால்அழித்த அனுமனின் அட்டகாசம் ,
அசாத்தியமானஅதிசாகசம். அனந்தராமன்அலைகடலின்
அதிபதியைஅடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,
அக்கரையை அடைந்தான்.
அரக்கன் அத்தசமுகனை அமரில்அயனின்
அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல்
அர்ப்பணித்த அன்னைஅவள் அதி அற்புதமாய் அண்ணலை
அடைந்தாள். அன்னையுடன்அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் .
அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேய
அடுக்கடுக்காகஅமைந்ததும் அனுமனின் அருளாலே!

(நன்றி …நன்றி …நன்றி )
