
திரைப்பட விமர்சனம் :
சாப்பிடுவதற்காக உயிர் வாழும் பிரகாஷ்ராஜ் சாப்பாட்டின் ருசியை ருசித்து நம்மைச் சப்புக் கொட்ட வைக்கிறார்!
பொண்ணு பார்க்கப் போன இடத்தில் நன்றாக வடைசெய்தது பொண்ணு இல்லை.என்று தெரிந்ததும் பொண்ணை அம்போ என்று விட்டுவிட்டு சமையல்காரனைத் தன் வீட்டில் சமைக்க அழைத்துப் போவது அருமையான காட்சி!
அழகான பேரிளம்பெண் ஸ்னேகா! கல்யாணமாகாமல் தவிக்கும் முதிர் கன்னி.! டப்பிங் ஆர்டிஸ்ட்! அவருக்கும் ஆர்க்கியாலாஜிஸ்ட் பிரகாஷ்ராஜுக்கும் பார்க்காமலே எப்படி சாப்பாடு மூலம் காதல் மலருகிறது என்பது சுவையான கவிதை!
ஒருவரை ஒருவர் பார்க்கத் திட்டமிடும்போது தாழ்வு மனப்பான்மையால் அக்கா மகனையும் சகோதரியையும் இருவரும் அனுப்புவதும் அவர்கள் இருவரும் காதலித்து பெரியவர்களை சண்டையில் மாட்டுவதும் சினிமாவில் தான் நடக்கும்!
இளஞ்ஜோடிகள் சிக்கென்று காதலிக்க பெரியவர்கள் தடுமாறுவது இயற்கையாக இருக்கிறது! முடிவில் ரெண்டு ஜோடிகளும் ஒன்று சேர்வதில் பெரிய த்ரில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இயல்பான நடிப்பாலும் இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையாலும் தம்பி ராமையா குமாரவேல் இருவருடன் கூட்டணி அமைத்து பிரகாஷ் ராஜ் வெடிக்கும் நகைச்சுவை வெடிகளினாலும் படம் ஜாலியாக ஓடுகிறது!
நடுவில் தேவையில்லாமல் ஆதிவாசியைப் புகுத்தி பிரகாஷ் ராஜை ஹீரோவாக்க முயலுவதுற்குப் பதிலாக நகைச்சுவையை இன்னும் சேர்த்திருந்தால் ஏ ஒன் காமெடிப்படமாக இருந்திருக்கும்!
