
தேவீ !
தேவ தேவதை நீ தானே ! மலர்
தூவும் பக்தனும் நான் தானே !
கண்களைத் திறந்ததும் பெய்திடும் பொன்மழை
புன்னகைக் கீற்றினில் பொங்கிடும் தேன் இதழ்
உருவே ! தினமும் உருகும் திருவே !
கனவே ! கணமும் மறவேன் உனையே !
பக்தனுக்கு ஒரு வரம் தந்திடுவாய் ! உன்னை
பக்தியால் பாடிட வரந்தருவாய் !
கவிதாபிஷேகம் செய்திட வந்தேன்
கற்பனை மலர்களை வார்த்தையில் தொடுத்தேன்
தேவியின் இளநலம் தேடினேன் கவிநயம்
தூவினேன் கண்மலர் தாளடி பணிந்தேன்
அஞ்சுதல் அகண்டு நெஞ்சமே துள்ளும்
கெஞ்சியே வந்தேன் கொஞ்சிடு தாயே !
