ஷேக்ஸ்பியர் காமெடி,ட்ராஜிடி நாடகங்கள் பற்றிக் கேள்விப்பட்டது தவிரப் படித்தது கிடையாது.
ஷேக்ஸ்பியரின் படைப்பான ‘மாக்பெத்’ நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது
‘வியட்நாம் வீடு’ சுந்தரம் அவர்கள் தனது அறுபது ஆண்டு பேனா அனுபவத்தைக் கொண்டாடும் வகையில் “MACTRICS” குழுவினருடன் இணைந்து . 5.08.14 மற்றும் 06.08.14 இரு தினங்களிலும் ‘மைம்’ (மௌன மொழி) வடிவத்தில் மயிலாப்பூரில் அரங்கேற்றிய நாடகம் அது.

ஷேக்ஸ்பியரும் அவரது மனைவியும் தவிர மற்ற கதாபாத்திரங்கள் பேசுவது இல்லை. ஒரு மணிநேரத்திற்குக் குறைவான இந்த நாடகத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.
- சுமார் 30 இளைய நடிகர்களின் ஆர்வம் மற்றும் "ENERGY LEVEL"
- மௌன நாடகத்திற்குத் தேவையான சரியான அளவில் மிகை நடிப்பு
- அற்புதமான ஒருங்கிணைப்புடன் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகள்.
- ஷேக்ஸ்பியரையே சூத்ரதாரியாக உபயோகிக்கும் டெக்னிக்
- சோகமாக ஆரம்பித்து மகிழ்ச்சியாக உருமாறும் நடனம்.
எதுவுமே குறைசொல்லமுடியாத இந்த நாடகத்தைக் கதை முன்பே தெரிந்திருந்தால் இன்னமும் ரசித்திருப்பேனோ என்று தோன்றுகிறது
