2/25

தேவையானவை (1 ½ கப்)
மல்லி விதை /தனியா 2 ½ டேபிள் ஸ்பூன்
ஓமம் 2 1/2 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 2 டேபிள் ஸ்பூன்
மிளகு 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பவுடர் 1/4 ஸ்பூன்
வெல்லம் 3/4 கப்
நெய் 1-2 ஸ்பூன்
தேன் கொஞ்சம்
தனியா, ஓமம், ஜீரகம், மிளகு இவற்றை இலேசான சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்
பிறகு இவற்றை மிக்ஸியில் நல்ல பேஸ்ட்டாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இத்துடன் இஞ்சிப் பவுடரைச் சேர்க்கவும். (இஞ்சிக்குப் பதிலாகச் சுக்கை உபயோகித்தால் அதையும் ஊறவைத்து அரைத்துச் சேர்க்கவும்). இவை ஒரு கப் பேஸ்ட்டாக வரும்.
¾ கப் வெல்லத்தை வாணலியில் இட்டு ¼ கப் தண்ணீர் விட்டு சூடாக்கிக் கரைய வைக்கவும்.அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதை மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேஸ்ட்டைச் சேர்த்துக் கலக்கவும்.
இதை லேசான ஜுவாலையில் சூடாக்கிஅவ்வப்போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு 15 நிமிடம் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
பிறகு நன்றாக ஆறவைத்து தண்ணீர் இல்லாத பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
தீபாவளி மருந்து தயார்.
இது காரமாக இருந்தால் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்க்கவும்.
மற்றொரு முறை:
எல்லா சமாசாரங்களையும் டிரையாக இலேசான சூட்டில் வறுத்து,பிறகு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மேலே சொன்ன மாதிரி வெல்லத்தைச் சேர்த்துத் தயார் செய்யவும்.
Thanks to Jayshri’s Kitchen
http://www.jeyashriskitchen.com/2012/10/deepavali-marundhu-recipe-how-to-make.html
