
கையில் துப்பாக்கியுடன் .நின்று கொண்டிருந்தான்.கண்களில் கொலை வெறி. கிறுக்கன் மாதிரி இருக்கிறான்,சாராய நெடி வேறு. எப்படித் தப்புவது?
உனக்கு .. உனக்கு என்ன வேண்டும்?
உன் உயிர்!
எதுக்கு.. எதுக்கு .. என்னைக் கொல்ல வேண்டும்?
நீ ஒரு சமுதாயத் துரோகி! .போன வாரம் கூட ஒரு சிறு பெண்ணைக் கற்பழித்தாய்.!
யார்.. யாரைச் சொல்லுகிறாய்.. ? நீ அவளோட அண்ணனா? அதற்காக எந்தப் பரிகாரம் வேண்டுமானாலும் செய்கிறேன். என்னைக் கொன்று விடாதே!
உன்னால் என்ன செய்ய முடியும்?
எது வேண்டுமானாலும்.. நீயே சொல்லு என்ன செய்ய வேண்டும்?
சொன்னான்.
அது மட்டும் முடியாது. நீயே என்னைச் சுட்டுவிடு.
சுட்டான்.

பக்கம் 20/25
