image

பழந்தமிழ் முறைப்படி காதல் பலிக்காத காளை  மடலேறுவான் என்று   சொல்லப்படுகிறது. திருக்குறளிலும் இதைப் பற்றிச் சொல்லப்படுகிறது!   

 சரி. அப்படி  ‘மடலூர்தல்/மடலேறுதல்’ என்றால்?  இந்த முறைப் படி பனை மரத்து மட்டைல ஒரு குதிரை வண்டி மாதிரி கட்டி, அதுல உக்காந்து போகணும்.-

           "பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

              பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை ( பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் சாம்பல் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் (ஓவியம் வரையப்பட்ட துணி) பிடித்திருப்பான். ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார்/நண்பர்கள் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.“

            ஊரார் எல்லாம் வந்து தலைவி வீட்டில் பேசி மணமுடிப்பர்!  பெற்றோர் எதிர்த்தாலும் பின்னர் இவ்வாறு செய்து திருமணம் செய்வது ஒரு முறை. . மற்றொரு முறையில், தலைவியை மடலேறுவேன்  என்று மிரட்டி சம்மதம் வாங்குவது.   ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாக அமைத்தது – சிறிய திருமடல், பெரிய திருமடல்.

கிட்டத்தட்ட நம்ம தனுஷ் வேலையில்லா பட்டதாரியில் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலைப் பாடுவது போலத் தான் மடல் ஏறுதலும். 

பக்கம் – 16