
வாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை.
இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!
1) இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்மடி நிறையப் பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று
வைத்துவாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
2 ) எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதிஎன்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி
-இங்குஇயற்கையை வணங்குகிறார்
– மலைஉயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று -இவர்
வாழ்வில் விளங்குகிறார்
3 ) நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப்
பெருமைவாராதிருந்தாலோ தனிமை
நிழல் போலும் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
4 ) செம்மாங்கனி -புன்னகை நல்லோவியம்
செவ்விதழ் – தேன்மாதுளை
பொன்மொழி – சொல்லோவியம்
சிந்துநடை போடும் பாற்குடம்
சின்னவிழிப் பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ
5) பதவி வரும்போது பணிவு வரவேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
விடை:
1) கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ………………. படகோட்டி
2) புதிய வானம் புதிய பூமி ………………………………… அன்பே வா
3) நான் பாடும் பாடல் ………………………….கண்ணன் என் காதலன்
4) மெல்லப்போ மெல்லப்போ ………………………….. காவல்காரன்
5) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …………….. தெய்வத்தாய்
