
கிராமத்தான் யானையைப் பார்த்தாற்போலே
என்றெல்லாம் சொல்லிவந்த காலமே போச்சு
ஏருழவன் கைநாட்டு வைக்கின்ற காலம் போய்
ஏர் பிடிக்கும் பட்டதாரி கிராமத்தில் மலிஞ்சாச்சு
‘யாரடா’ என்று சொல்ல பண்ணையில்லை யின்று
கூட்டவுப் பணைகள் பெருமளவில் வந்தாச்சு
சீராகக் கல்விதனைக் கற்றுவரும் கிராமத்தார்
ஊரார்க்கு உபதேசம் சொல்லும் வகை வளர்ந்தாச்சு

காதிலே பூ வைத்த ஏமாந்த சோணகிரி
கேலிக்கு உள்ளான கிராமத்தான் இன்றில்லை
எத்தொழிலும் யாம் செய்வோம் நாட்டுவளம் பெருகிடவே
முரசுகொட்டி நிற்கின்றார் மாண்பு மிகு கிராமத்தார்
பத்தாண்டு முன்பிருந்த கிராமமில்லை யிப்போது
கைத்தொழிலும் முன்னேற வருவாயும் பெருக்கிடவே
காந்தி கண்ட சமுதாயம் இனிதாக வருகிறது

நாட்டுவளம் பெருகிடவே கிராமமே ஆதாரம்
புத்தம் பிட்டு அரசுக்கு தெளிவாகப் புரிஞ்சச்சு
திட்டங்கள் பலதீட்டி பழுதரவே செயலாக்கி
எண்ணை விளக்குதனை மின்விளக்கால் எழிலாக்கி
பொட்டைவெளி நிலந்தன்னை பொன்விளையும் பூமியாக்கி
கிராமத்து நாகரீகம் நகரத்தை மிஞ்சிடவே
சிட்டாக கிராமங்கள் பீடுநடை போட்டிடவே
மட்டற்ற மகிழ்வோடு உறைகின்றார் கிராமத்தார்.
