மழலைக்
குழந்தையில் பேதமில்லை கண்ணே

மழலை மனதினிலே
வஞ்சமில்லை பெண்ணே

முதலில்
சொல்வதுவும் ‘அம்மா’வென்றசொல்லே

முருகனென்றோ
அல்லாவென்றோ ஏசுவென்றோ இல்லெ..!

 

பிறக்கின்ற
குழந்தையொன்  றுங்கொண்டு வருவதில்லை

இறக்கின்ற மனிதனொன்றும்
கொண்டு போவதில்லை

நிலையில்லா
வாழ்க்கையிலே ஏனிந்தத் தொல்லை

அல்லாவா ராமரா
ஏனிந்தச் சண்டை !

நீர்பருக
டம்ப்ளரே வேணுமென்பார் சிலமாந்தர்

ஒர்சிலர்   குவளையிலே மனதாரப் பருகிடுவார்

கலயங்கள்
உருவத்தில் வேறாக இருந்தாலும்

ஜில்லென்ற
தண்ணீரில் பேதமில்லை ஒன்றுதானே !

ராமரென்று
அழைத்தாலும் அல்லாவென்று பணிந்தாலும்

வாமனனே  யென்றாலும்
கர்த்தரென்று சொன்னாலும்

கோயிலிலே
சர்ச்சினிலே மசூதியிலே அருள்கின்ற

தெய்வமும்
ஒன்றுதானே பிரம்மத்தின் பெயர்கள்தானே!

 

இந்தியனே
தூங்காதே மானத்தை வாங்காதே

காந்தியின்
தேசத்தில் எம்மதமும் சம்மதம்

தியாகங்கள்
பலசெய்து ஈன்றநற்  பெயரினையே

நியாயமற்ற  செய்கையால் நொடிப்பொழுதில் இழக்காதே!