குவிகம் இலக்கிய வாசலின் எட்டாம் நிகழ்வு நவம்பர் 21ந் தேதி திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
திருமதி ஸ்ரீஜா வெங்கடேசன் அவர்கள் தான் இயற்றிய பாண்டிய
காப்பியம் என்ற புத்தகத்தைப் பற்றியும், சரித்திர நவீனங்களைப் பற்றிப் பொதுவாகவும் பேசினார்.
விஜயலட்சுமி அவர்கள் குவிகம் இலக்கியவாசலின் எட்டு மாத நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டினார்.
நிகழ்ச்சிக்கு முன் வழக்கம் போல ஒரு கவிதை மற்றும் ஒரு கதை வாசிக்கப்பட்டன.
கதை : கீதா அவர்கள்
கவிதை : சாந்தி அவர்கள்
கிருபானந்தன் சரித்திர நவீனங்களில் இழையும் சரித்திரப் பின்னணியைப் பற்றியும் , மற்ற எழுத்தாளர்களிலிருந்து ஸ்ரீஜா அவர்கள் எவ்விதம் வேறுபட்டிருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டினார்.
இதன் ஒலி வடிவத்தை இலக்கியவாசல் பிளாக்கில் கேட்கலாம்.
