இது சங்கீத சீசன் . மழை சங்கீதத்தைக் கொஞ்சம் கெடுத்துவிட்டாலும் , நிறைய பாடகர்கள் பாடமாட்டேன் என்று சொன்னாலும், மற்ற உயர் மட்டப் பாடகர்கள் பாடுவதற்குத் தயாராய் இருக்கின்றனர். பாடுபவர் பாடட்டும் ; வேண்டாதவர் பாடாமலிருக்கட்டும்.
இலக்கியக் கூட்டங்கள் சாதாரணாமாகவே கொஞ்சம் பின்னிருக்கையில் உட்காரும் நேரம் இப்போது. ( காரணம் : டிசம்பர் சீசன் ) குவிகம் இலக்கியவாசலின் அடுத்த நிகழ்வு வருகிற 19 ந்தேதி ச
னிக்கிழமை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற உள்ளது.
திரு அழகிய சிங்கர் அவர்களின் புத்தகமான “நேர் பக்கம்” அன்றைக்கு அறிமுகமாகிறது.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அழகியசிங்கரின் – ஏன் தமிழகத்தி
ல் அனைவருடைய மதிப்பிற்கும் போற்றுதல்களுக்கும் உரிய உயர்திரு அசோகமித்திரன் அவர்கள் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்கிறார். புத்தகத்தைப் பற்றியும் மற்றும் இலக்கியங்கள் பற்றியும் பேசுவார். .
நிச்சயம் குவிகம் இலக்கிய வாசலுக்கு இது ஒரு பொன்னாள்.
மேலும் சில இலக்கிய விமர்சகர்கள் அழகியசிங்கரின் நூலை அறிமுகப்படுத்திப் பேசுவார்கள்.
வழக்கம்போல சிறுகதை மற்றும் கவிதை மணித்துளிகளும் உண்டு!
அனைவரும் வாருங்கள் !!!
