
நவம்பர் 20. டிசம்பர் 1 – இரு தேதிகளையும் தமிழகம் , குறிப்பாகச் சென்னை மறக்க முடியாது. சென்னைத் தாயின் இரு விழிகளிலிருந்தும் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தினங்கள்!
மேகம் வெடித்தது போல் – வானமே பொத்துக்கொண்டு விழுந்தது போல் பெய்த மழை மக்களை அரட்டிவிட்டது- பிரட்டிப் போட்டது – மழையும் வெள்ளமும் தான் சென்னையின் மிகப்பெரிய தாதா என்பதை இந்த மழை நிரூபித்து விட்டது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தர மக்களையும் உலுக்கி எடுத்துவிட்டது.
குளங்கள் வழிந்தன – ஏரிகள் உடைந்தன – ஆறுகள் கரை புரண்டன – அணைகள் பொங்கின – தொடர் மழை – வீட்டுக்குள் சாக்கடையும் குடிநீரும் சேர்ந்து ஓடும் அவல நிலை – சாலைகளில் ஆறுகள் – வீடுகளில் குளங்கள் – உடமைகள் எல்லாம் பாழ் – வாகனங்கள் நீரில் மூழ்கின – விலைமதிப்பில்லா உயிர்களும் மடிந்தன. மீடியாக்களூம் பத்திரிகைகளும் பேஸ்புக்குக்களும் வாட்ச் அப்புக்களும் கோரக் காட்சிகளைப் படம் பிடித்துப் போட்டு அந்த சூட்டில் குளிர் காயும்.
ஒரே பாரட்டத்தக்க அம்சம் தனிமனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் ,மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்த பெருமை. அவரது கால்களில் நம் சிரம் பதியும்.
கட்சி டிவிக்கள் இதை சாக்காக வைத்துக் கொண்டு மற்றவர் மீது சேற்றை வாரி இ்றைக்கும். அரசாங்கமும் சட்டசபையில் நட்சத்திர விடுதிகளில் மக்களின் புனர் வாழ்வைப் பற்றி விவாதிக்கும். நாமும் ‘லட்சுமி வந்தாச்சு’ மானாட மயிலாட என்று சீரியலுக்குள் தலையை விட்டுக் கொண்டு விடுவோம்.
வெள்ளம் கற்றுக்கொடுத்த பாடத்தை மறக்கலாமா?
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
