வாசகர்  எண்ணம்

[வாசகர்களைத் துருவி துருவிக் கேட்டதில் கிடைத்த எண்ணங்கள் இவை.

பெயரைப் போடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் போடவில்லை.] 

சந்திரகுப்தரும் சாணக்கியரும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். இந்திய கிளியோபாட்ரா அமராப்பள்ளியைப் பற்றி சொல்லுங்கள் !

 குட்டீஸ் சுட்டீஸ் நன்றாக இருக்கிறது !

சரித்திரம் பேசுகிறது எழுதுவது யாரோ? அட்டகாசமா இருக்கு. அதுவும் சந்திரகுப்தர் கதை டாப் டக்கர்.

இலக்கியவாசலைப் பத்தியே எழுதி மூணு பக்கத்தை ரொப்பீட்டீங்களே !

குமுதத்திலே கடல்புறா நாடகம் சூப்பர்னு எழுதியிருக்காங்க, நீர் என்னவோ காமாசோமான்னு எழுதியிருக்கிறீரே?

ஏன் ஸ்வாமி? சினிமா பாக்க காசில்லையா? ஒரு பட விமர்சனம் கூட குவிகத்தில வர மாட்டேங்குது?

அலாரம் கதை மணியாக இருந்தது.

‘எதற்காக எழுதுகிறேன்?’ பகுதி சுயவிமர்சனமோ என்று நினைத்தேன்.

குறும்படங்கள் எல்லாம் கலக்கலாக இருக்கின்றன.

தலையங்கங்களில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிவதேயில்லை !