sujatha1

சுஜாதா திரைஉலகைப் பற்றி  குமுதம், உயிர்மை போன்ற இதழ்களில் எழுதிய  கட்டுரைகளின் தொகுப்பு ! பார்வை 360  என்ற புத்தகத்திலிருந்து!

அவர் எழுதிய கதைகளை சினிமாவாக மாற்றியபோது பெற்ற ஏமாற்றங்களைத் தயக்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.  சுஜாதா தன் கதையின் தயாரிப்பாளர்/டைரக்டரிடம்  அடிக்கடி கேட்கும் கேள்வி             ” இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது? ”

சுஜாதா சொல்கிறார்: ” ஒரு சிறுகதையோ , நாவலோ தரும் அனுபவத்தை -பங்கீட்டை சினிமாவால் தரமுடியாது .அதேபோல் சினிமா தரும் காட்சி அனுபவத்தை சிறுகதையால் தரமுடியாது. .. இரண்டுமே வெவ்வேறு துருவங்கள்!  .. முந்நூறு  பக்கம் நாவல் அவர்களுக்கு வேஸ்ட் . .. சிலசமயம் சினிமாவுக்காக எழுதிக் கொடுத்ததை, பிறகு சிறுகதையா எழுயிருக்கிறேன் …

சினிமாவாக மாறின  அவரது கதைகள்  சிலவற்றை – சில குறிப்புக்களை நாம் கொறிக்கலாம் ! நம்ம ஸ்டார் மதிப்பெண்களுடன்!

சுஜாதாவின் காயத்ரி என்ற தினமணி கதிரில் வந்த கதை  அதே பெயரில் சினிமாவாக வந்தது. ஸ்ரீதேவி தான் காயத்ரி – ரஜினிகாந்த் வில்லன் ஜெய்சங்கர் கடைசியில் வரும் கதாநாயகன்.                                                  (கதை   திரைப்படம்  )

அனிதா இளம் மனைவி என்ற குமுதத்தில் வந்த கதை “இது எப்படி இருக்கு? ” என்ற தலைப்புடன்  ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தது.   (கதை   திரைப்படம்  )

sujatha2

ப்ரியா – குமுததில் வந்த ஹிட் கதை – ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் ( டார்லிங்..டார்லிங்.. , அக்கரை சீமை, ) சிங்கப்பூர் பின்னணி, ரஜினியின்  you too Brutus ஜூலியஸ்  சீசர் நாடகம்   (கதை    திரைப்படம் )

குமுதத்தில் வந்த 24 ரூபாய் தீவு என்ற கதை ‘ஒண்டித்வனி’  என்ற பெயரில் அம்பரீஷ் நடித்து கன்னடத்தில் வந்தது. அவரே சொல்லுகிறார். படம் படு பிளாப்பாம் !  (கதை   திரைப்படம்  )

கமல்ஹாசனுக்காக இவர் எழுதிய கதையின் படப்பிடிப்புத் தொடங்கிய பிறகு அதன் புகைப்படங்களை வைத்து குமுதத்தில் எழுதிய கதை “விக்ரம்” டிம்பிள் கபாடியா, அம்ஜத் கான், சத்யராஜ் நடித்த படம்.  (கதை    திரைப்படம் )

கமலுக்காக மருதநாயகம் படத்தின் ஸ்கிரிப்டை இவர் தயார் செய்து இங்கிலாந்தின் எலிசபெத் அரசியின் முன்னிலையில் படம் தொடங்கப் பட்டது. இப்பவும் கமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். மருதநாயகத்தை எடுக்கப் போகிறேன் என்று.  ( கதை —  திரைப்படம் — )

ஆனந்த விகடனில்  அவர் எழுதிய ‘ஜன்னல் மலர்’ கதை  “யாருக்கு யார் காவல்” என்று  எம்.ஆர்.ராதா ,ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா  நடித்த சினிமாவாக மாறியது. படம் படு பிளாப்.

அதில்  ஆச்சரியம் என்னவென்றால் , இப்போது இறைவி எடுத்த கார்த்திக் சுப்புராஜ் டைட்டிலில் “partly inspired by Sujatha’s Jannnal Malar’ என்று போட்டிருக்கிறார்.

சாவி இதழில் வந்த  காகிதச் சங்கிலிகள் கதை பொய்முகங்கள் என்ற பெயரில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் தமிழில் வந்தது.  பின்னர் கன்னடத்திலும் அது எடுக்கப்பட்டது.

இந்த இரண்டையும் பற்றி சுஜாதா, “சினிமா எடுத்து கெடுக்கப்பட்ட என் கதைகள்” என்று குறிப்பிடுகிறார்.

ஆனந்த விகடனில் வந்த மாபெரும் ஹிட்டான ‘கரையெல்லாம் செண்பகப்பூ”  கதை பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, மனோரமா நடித்தது வெளிவந்தது.   ப.ப.பி ரகம். (கதை    திரைப்படம் )

sujatha3

இவருக்கு சினிமாவில் இப்படிப்பெயர் வந்ததாம். அவரே சொல்கிறார்.         ” வேண்டாங்க. ராசியில்லாத எழுத்தாளர். .. தேவைப்பட்டா..”

அதற்குப்பிறகு சுஜாதா அவர்கள் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள் எடுக்கும் படத்துக்கு வசனமும் கதைக்கு ஆலோசனையும் அமைக்கத் தொடங்கினார்.

அப்படி வந்த படங்கள்

ஷங்கரின், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன். அத்தனை படங்களிலும் சுஜாதாவின் முத்திரை நன்றாகவே தெரியும்.

(முதல்வனில் இன்டர்வியூ , சிவாஜியில் டீக்கடை, அன்னியனில் அம்பிபேசும் உண்மை, பாய்ஸின் இளமை, எந்திரனில் ரோபோவின் ஒவ்வொரு பிரேமிலும் சுஜாதா தெரிவார். )

மணிரத்னத்துடன் ரோஜா ( தேசியக்கொடி காட்சி), திருடா திருடா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு, லாஜோ

பாரதிராஜாவுடன் இணைந்து கண்களால் கைது செய், நாடோடித் தென்றல், பொம்மலாட்டம்

பிரசாந்த், சிம்ரன் நடித்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’   , விஷால் ,பரத் நடித்த ‘செல்லமே’

மொத்தத்தில் கதையில் – வசனத்தில் கொஞ்சம் புத்திசாலித் தனம் தேவையென்றால் தயாரிப்பாளர்களும் டைரக்டரும் நாடியது சுஜாதாவை.