
நேற்றைய நாளைக்கும் நாளைய நேற்றைக்கும்
வேறுபாடு நிறைய உண்டு
நேற்றுப் போனால் நாளை வரவில்லை
எனவே நேற்றைய நாளை
வெறும் கற்பனை கனவு எதிர்பார்ப்பு
நாளைக்குப் போய்ப் பார்த்தால்
நாளையும் தெரியும் நேற்றும் தெரியும்
இரண்டிலும் எதார்த்தம் பிடிபடும்
நிஜத்தின் தரிசனம் கிட்டக்கூடும்
ஆனால், ஸ்வாமி, இன்றென்னவோ?
