

பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர், அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி அன்று இரவு நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் அனைத்து உள்ளங்களுக்கும் குவிகம் தன் இதய பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது .

சிறுவயதிலிருந்தே நடனத்தில் தனது தனி முத்திரையைப் பதித்தவர் .

திரைப்படங்களில் தன் திறமையாலும் எம் ஜி ஆரின் ஆதரவாலும் முதல் இடத்தைப் பிடித்தவர். இவர் நடித்த படங்களில் 90 சதவீதம் சூப்பர் வெற்றி.
அரசியலில் இவர் அடைந்த வெற்றிக்கு அளவே இல்லை. 6 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பல சோதனைகளைத் தாண்டி வெற்றி கண்டவர். ஊழல் வழக்கினால் முதல்வர் பதவியை இழந்தவர். அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பால் 100 கோடி அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். ஆனால் பின்னால் அவையெல்லாம் சட்டத்துக்கு முரணானது அல்ல என்று தீர்ப்பு வாங்கி மக்களின் முதல்வராகத் திகழ்ந்தவர்.
அவருக்குப் பின் அதிமுக வில் யார்?
சசிகலா??
விரைவில் தெரியும்!

