ஆதவன் துயில் கொண்டான்

Image result for sun set

இனிய மாலையில் ஆதவன்
தன் கிரணங்களை மறைத்து
துயில் கொண்டான்
காரிருள் சூழ்ந்தது கண்டாய்
காலை விடியும் வரை
அவன்வரவை கண்மூடி
காத்திருப்போம்
கலங்காதிரு மனமே.

படும்துளி எழில்தரும்
மலர்தனில் தேன்வரும்
வண்டினம் அலைமோதும்
கதிரவன் கீழ்வானில்
காலை விழித்தெழும் .

உதித்தனன் கதிரவன்
செம்பிழம்பாய் கொதித்தனன்
தகித்தனன் வையம்காக்க
முரசுகொட்டி தட்டி எழுப்பினன்
தன்பணி செவ்வனே செய்தனன்
பூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்
தன்பணி தொடர்ந்தனன்
காலை கதிரவன் நமக்கு மேலே
ஆம் நமக்கு மேலேதான்

 

ஏமாற்றம் தரும் வேளை

Image result for disappointment

ஏமாற்றம் தரும் வேளை
அன்பும் போலி
வாழ்வும் போலி
நினைவும் போலி
புன்னகையும் போலி
அதனால்
நியாயம் எங்கே
நேர்மை எங்கே
நிஜங்கள் எங்கே
வலை வீசி தேடினும்
புலப்படாது இங்கே .