![]()
பொன்னியின் செல்வன் கதையை சித்திரக் கதையாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் தஞ்சையைச் சேர்ந்த ஓவியர் ப. தங்கம் என்பவர்.
முதல் ஏழு அத்தியாயங்களை சித்திரக் கதையின் முதல் புத்தகமாக சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தார்.
தற்போது அதன் இரண்டாம் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
சென்னையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வசந்தம் வார மலரில் ‘வீர சோழன்‘ என்ற தலைப்பில் ஏழு ஆண்டுகள் மாமன்னன் ராஜராஜசோழனின் வீர வரலாற்றினை வரைந்து சித்திரக்கதையாக வெளியிட்டார்.
அம்மன்னனைப்பற்றிய சித்திரக்கதைகளைத் தமிழகக் குழந்தைகளுக்குத் தருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார்
80 வயது ஆகியும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்ட ஓவியர் தங்கம் அவர்களைக் குவிகம் சார்பில் வாழ்த்துகிறோம் .
ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 200 மட்டுமே.
பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரும் இதை வாங்கி அவரை ஊக்குவித்துப் பெருமையடையவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
ஓவியர் தங்கம் அவர்களை 9159582467 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தனது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிப்பார். அந்தக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தியதும் புத்தகத்தைத் தபாலில் அனுப்பி வைப்பார்.



