நல்லா இருக்கனும்

பிச்சைக்குக்
கையேந்தி நின்றார்
பெரியவர். மகன் மக்களால்
கைவிடப்பட்டவர்.
ஒருரூபா
தட்டில் விழுந்ததும்
.’உன் குழந்தைகுட்டி
நல்லா இருக்கனும்’
என்றபடி நகர்ந்தார்.
இது என்ன கூத்து.

இது என்ன கூத்து ….!
வந்ததோ நற்செய்தி
வரவேற்கும் எதிர்காலம்
துள்ளவேண்டும் மகிழ்ச்சியில் ஏன் இப்படித் துவண்டுவிட்டாய்
துன்பம் துயரம்
கண்டு கண்டு
பழகியதால்
நற்செய்தியை ஏற்க
மனம் மறுக்கிறதோ
உடல் எதிர்க்கிறதோ ?
வாழையடி வாழை
வெட்டிய வாழை பந்தலில் கட்டிய வாழை
நீர்சிந்தி நிற்கிறது
குலையுடன். மண்டபத்துள்ளே
இருமனம்சேர
குலம் தழைக்க
திருமணம் நடக்கிறது
வாழையடி வாழை
