
வார்த்தையால் வாழ்வ ளக்கும்
வடிவமே கவிதை ஆகும்
நேர்த்தியாய்ச் சொல்லி ருக்கும்
நிரல்படக் கருத்தி ருக்கும்
ஈர்த்திடும் எழிலி ருக்கும்
இன்சுவை விரவி நிற்கும்
கோத்தவோர் மொழியின் மாலை
குளிர்தமிழ் இன்பச் சோலை.
வெடுக்கெனக் கற்ப னையாம்
விரிந்திடும் தூண்டில் வீசி
உடுக்களை, நிலவை , மேலே
உலவிடும் கதிரைப் பற்றி
அடுக்கியே கவிதை செய்வோம்.
அந்தமில் வான்சு ருட்டிப்
படுக்கநல் பாயாய் மாற்றிப்
பைந்தமிழ்ப் பனுவல் செய்வோம்
பழங்கதை படித்துச் சொல்வோம்
பழமையில் பெருமை கொள்வோம்
வழங்கிடும் புதுமை மற்றும்
வயங்கிடும் கலைகள் கற்று
முழங்கிடும் தமிழில் நூல்கள்
முனைப்புடன் வடித்துச் செய்வோம்
ஒழுங்குடன் மரபைப் பேணி
உயர்ந்தநல் கவியும் செய்வோம்
