குரங்கணி தீ விபத்து - பலி 16 ஆக உயர்வு

(நன்றி: தந்தி )

16 உயிர்களைப் பலிவாங்கியது போடி  அருகே உள்ள  குரங்கணி வனப்பகுதி. மலை ஏறுவதற்காக உற்சாகமாகச் சென்ற இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரை இழந்திருப்பது கொடுமையிலும் கொடுமை!

அரசு இயந்திரம் சரியில்லை, அனுமதி  பெறவில்லை, தவறான பாதையில் சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவதில் எந்தவிதப் பயனும் இல்லை.

காட்டு இலாக்கா தன் பொறுப்பை சரிவரச் செய்ய அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரவேண்டும்.

உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் மட்டுமன்றி இழப்பீடும் தர அரசு முன்வர வேண்டும் !