Related image

இன்று

நாங்கள் காலை துயில் எழுந்து

நாட்காட்டியைப் பார்த்தால்

பங்குனித்திங்கள் பெற்றெடுத்த  

சித்திரைப்பாவையே உந்தன்

மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

 

இன்று

நோக்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நேசக்கரம் நீட்டுகிறதே !

 

இன்று

கேட்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மனிதநேயம் ஒலிக்கிறதே !

 

இன்று

தீண்டுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மலரின் மென்மை உணரப்படுகிறதே !

 

இன்று

பேசுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

 

இன்று

நுகருமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நறுமணம் வீசுகிறதே!

 

இன்று

வணங்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

தெய்வ அருள் பொழிகிறதே!

 

இன்று   

சித்திரைப்பாவை உன் வரவாலே

நேத்திரம் குளிர்ந்தது

சத்தியம் தர்மம் மனிதநேயம்    

நித்தியம் உலகில் வளர வேண்டி

சித்திரைப் பாவையை நாம்

பக்தியுடன் வணங்கி வரவேற்போம் !