Image result for vadaiImage result for vadaiImage result for வடை மாலை

Image result for ரச வடைImage result for தயிர் வடை

அம்மா கை உணவு (18)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .

இட்லி மகிமை – ஏப்ரல் 2018

தோசை ஒரு தொடர்கதை – மே 2018

அடைந்திடு சீசேம் – ஜூன் 2018

ரசமாயம் – ஜூலை 2018

போளி புராணம் – ஆகஸ்ட் 2018

அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18

கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   

கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018

சேவை செய்வோம் – டிசம்பர் 2018

பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019

பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019

வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019

பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019

ஊறுகாய் உற்சாகம் – மே 2019

பூரி ப்ரேயர் – ஜூன் 2019

இனிக்கும் வரிகள் – ஜூலை 2019

  வடை வருது ! வடை வருது !

 

உடலுக்கு நல்லதென்று இட்லி தின்னப் போனேன் !

எண்ணெய் இல்லா பண்டமென்று எண்ணிக்கொண்டு சென்றேன் !

வடையைக் கண்ட பின்னர் என் மனதில் மாற்றம் கொண்டேன் !

எடை, எண்ணெய் எல்லாம் விட்டு வடையில் கையை வைத்தேன் !

 

வாசம் பிடித்தால் போதும் எனக்கு வடை மேல் ஆசை கூடும் !

வாடைகாற்று தாங்கிடுவேன் இந்த வடைக்காற்று வாட்டும் !

மூக்கைத் துளைக்கும் வடையே என் மூளை கூட துளைக்கும் !

நாக்கை வெளியே இழுத்து என்னை ஆசை கொள்ள செய்யும் !

 

உளுந்து வடை போதும் நான் உலகம் சுற்ற வேண்டாம் !

மசால் வடை போதும் எனக்கு மற்ற சுகம் வேண்டாம் !

தின்ன தின்ன திகட்டாத சின்ன சின்ன வடையே !

டோனட்டை எள்ளி விடும் எங்கள் நாட்டு வடையே !

 

மொறு மொறுவென வடையினையே அம்மா செய்து தருவாள் !

விண்டு விட்டால் உள்ளே அது மெது மெதுவென இருக்கும் !

என்ன விந்தை இதுவென்று இறைவன் கூட திகைப்பான் !

நாள் கிழமை என்றால் அவனும் நாக்கை நீட்டி வருவான் !

 

வெறும் வடையே போதுமென்று நானும் நினைக்கையிலே !

சாம்பார் வடை ரசவடையென வெரைட்டி காட்டும் வடையே !

மோர்க் குழம்பு வடை கூட உப்புரப்பாய் இருக்கும் !

தயிர் வடையில் முடிந்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும் !

 

வாழ்க்கையே உனக்கு விடை கொடுக்க நான் ரெடி !

வடையை மட்டும் விட மாட்டேன் கடைசி வரை ஒரு கடி !

ஒன்றிரண்டு மூணு நாலு முடிவில்லாத வடையடா !

அன்னை காட்டும் அன்பு போல திகட்டிடாத சுவையடா !      

 .