தெரிந்தே இறங்கிய

  ஆழமான நதியில்

  அமிழ்ந்து கொண்டிருக்கிறேன்

 

நீரைக் குடித்துக் கொண்டு

உராயும் மீன்களை உதறியும்

போய்க்கொண்டிருக்கிறேன்.

 

முத்துகுளிப்பவன் போல

சிப்பிகளைக் கொண்டுவந்து

குவிப்பேன் என நீ காத்துக்கொண்டிருக்கிறாய்

 

இன்னமும் வெளிவரும் குமிழ்கள்

என் இருப்பை உணர்த்தலாம்

 

பல பெரிய சுறாக்கள்

பொறாமைக் கண்களுடன்

ஆனால் புன்சிரிப்புடன்போகின்றன.

 

என்மேல் படரும் பாசிகள் 

எனக்குப் புது நிறம் அளிக்கின்றன.

 

எந்த நிறமாய் மாறினாலும்

நீ என்னை அறிந்து விடுவாய்

ஆழத்திலேயே அமிழ்ந்து விடலாமா

என யோசிக்கிறேன்