Baskaran Kannan: மழை துளி-3

செய்,

துளியேனும் செய்!

 

செய்,

துணிந்து செய்!

முயன்று செய்,

முடிப்போம் என நம்பிச் செய்.

செய், துளியேனும் செய்!

 

எதனைச் செய்தாலும்

ரசித்து, ருசித்துச் செய்!

தொடர்ந்து செய்!

செய்,

துளியேனும் செய்!

 

மாற்றத்தைக்

கொண்டு வா!

அதற்குச்

செய்,

துளியேனும் (நீயும்) செய்!

 

உன்னில் உள்ள வளம் என்ன?

உன் வலிமைகள் என்ன?

என்பதை

சிந்திப்பீர், சிந்திப்பீர்!

 

வளங்களை அதிகரித்து,

வலிமைகளைக் குவித்துக் கொள்!

நலங்கள் பெருகும்!

 

பாதையை வடிவமைத்து

செல்,

வெற்றியின் நம்பிக்கையுடன் செல்!

 

கணக்கில்லா உன் வரப்பிரசாதம்!

இருப்பது ஒவ்வொன்றும் கொடுப்பினை என்று உணர்வதே முதல் வரப்பிரசாதம்!

 

உன்னுள் வளங்கள் கைகொடுக்க,

கனவுகளை

நிறைவேற்றி பூர்த்தி செய்யவே

உறவின் கரங்கள் உதவ இருக்க!

 

தயக்கம் என்ற இடையூறா?

உதவி கேட்பது,

மற்றவர்களை ஆதரிப்பது

கற்றுக்கொள்வது

மதிப்பது, உதவுவது!

இவையே உன்

 அடையாளாமாகிக் கொள்!

 

செய்து கொண்டே இரு,

இலக்கையை அடைவாய்!

பொறுத்துச் செய்வதால்

வெல்வாய்!

 

பலனை எதிர்பாராமல் செய்!

பிறந்த பயனை அறிந்து கொள்!

அதற்கெனவே

செய்,

துளியினும் செய்!

 

ஒற்றுமையுடன், மற்றவரையும்

கூட அழைத்துச் செய்

வெல்வோம் என எண்ணிச் செய்!

அதற்கு,

செய்,

துளியினும் செய்!