வேற்றுமையில் ஒற்றுமை..! கோவை சங்கர்
Hindu and Muslim children show unexpected religious tolerance | Berkeley  News
மதங்களின் பெயரால் சண்டையிடும் மக்கள்நீர்
மனதிருத்தி யோர்நிமிடம் சிந்தித்துப் பார்த்தீரோ
சித்தமதைப் பின்னோக்கி மெதுவாகச் செலுத்திடுவீர்
செல்லுகின்ற பாதையிலே யுண்மைபல வுணர்ந்திடுவீர்
சோதரரும் முன்னோர்கள் பாரதத்தின் மைந்தர்களே
அண்டைய நாட்டினரின் வழிவந்த வரவல்ல
மாதவனும் இந்தியனே மகாதேவனும் இந்தியனே
அப்துலும் இந்தியனே தாமஸ¤ம் இந்தியனே!
சனாதன தர்மத்தை வாழ்க்கையின் நெறியாக
மேற்கொண்ட சமுதாயம் நம்பாரத சமுதாயம்
அண்டைய வேந்தருமே வந்தனரே நமையாள
அவர்மதக் கோட்பாட்டை விதைத்துச் சென்றனரே
வணிகமென்ற பெயரிலே அந்நியரும் வந்தனரே
அவர்மதக் கோட்பாட்டை பயிரிட்டுச் சென்றனரே
எம்மதமும் சம்மதமென நின்றநம் சமுதாயம்
ஏனைய மதங்கட்கு கம்பளம் விரித்தது..!
அரசாணை மேற்கொண்டு மாறியவர் சிலபேர்
வறுமைநிலை மாறிடவே மாறியவர் சிலபேர்
விருப்போடு மதம்மாறிச் சென்றவர் சிலபேர்
காதலியைக் கைப்பிடிக்க மாறியவர் சிலபேர்
வழிபாடுன் தனியுரிமை யென்றுநம் சமுதாயம்
நடப்பதைப் பார்த்துமே மௌனம் காத்தது
வந்தோரெலாம் போய்விட்டார் எஞ்சியவர் இந்தியரே
பலப்பல மதங்களையே தாங்கியே நிற்கின்றோம்.!
நம்நாட்டில் வாழ்கின்ற முஸ்லீம்கள் கிறித்துவர்கள்
மதம்மாறி பயில்கின்ற வம்சாவளி இந்தியரே
நாமெல்லா மோர்குலமாய் வாழ்ந்துவந்த நம்மிடையே
ஏனிந்தச் சண்டை ஏனிந்தப் பூசல்
பக்திநெறி வேறென்று பலமாகச் சொன்னாலும்
நம்முள் ளெழுகின்ற பக்திரசம் ஒன்றன்றோ,,
பூசல்களால் பெருந்துயரம் கொள்வதோ நம்நாடு
மாற்றானுக் கதுலாப மென்பதுவும் புரியலையோ!
சக்தியோ சிவனோ மாதவனோ மகாதேவனோ
ஏசுவோ அல்லாவோ புத்தரோ குருதேவரோ
அகிலத்தை யாள்கின்ற முப்பெருந் தேவியரோ
பக்தியொடு வணங்கென்று சொல்வதுநம் சித்தாந்தம்
பல்வேறு பெயர்களிலே தொழுகைநாம் செய்தாலும்
நம்முடைய வேண்டுதல்சென் றடையு மிடமொன்றே
எல்லாமத நெறிகளையும் மனதார மதித்திடுவொம்
வேற்றுமையில் ஒற்றுமையை ஒருமித்துக் காத்திடுவோம்!
——————————–
குட்டீஸ் லூட்டீஸ்:
Happy New Year 2022 - Countdown on Sun TV Channels | EXCLUSIVE | Harish  Govindaraj - YouTube
ஆவி சொன்ன ஹாப்பி நியூ இயர்
டிசம்பர் 31ஆம் தேதி இரவு.
புத்தாண்டு வரவைக் கொண்ட்டாட நண்பர்கள் மூவர்
குடும்பத்தோடு ஒரு நண்பன் வீட்டில் கூடியிருந்தோம்.
மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
டின்னர் சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்துக் கொண்டி-
ருந்தோம்.
சின்னத்திரை ஒரு சானலில் புத்தாண்டு வரவேற்பு
நிகழ்ச்சிகள் நேரலையாக வந்து கொண்டிருந்தது.
மணி பன்னிரண்டு. ‘ஹாப்பி நியூ இயர்’ என்று சின்னத்
திரை முழங்கியது. ஒவ்வொரு சீரியல் நடிகர்களும்.
நடிகைகளும் முன்னே வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ என்று
வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்மா.. ஆவி வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லித்து’
என்று சொன்னது ஒரு குழந்தை சத்தமாக. எங்கள்
எல்லோர் பார்வையும் டி.வி. பக்கம் திரும்பியது.
‘என்னடி சொல்றே..’ என்றாள் அக்குழந்தையின் அம்மா
கிசுகிசுப்பான குரலில்.
வாழ்த்து சொல்லி விட்டு. ஒரு பக்கமாகச் சென்று நின்ற
அந்த நடிகையைக் காட்டி, ‘ அம்மா அந்த ஆன்டி
இன்னிக்கு ராத்திரி சீரியல்லே ரோடு ஆக்ஸிடன்டாகி
செத்துப் போயிட்டாங்க.. இப்போ அவங்க ஆவி வந்து
ஹாப்பி நியூ இயர் சொல்லுது’ என்றாளே பார்க்கலாம்..
அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் விக்கித்துப் போய்
நாங்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லக் கூட
மறந்து போய் நின்றோம்.
— சிவமால்
—————————————–