StarsUnfoldedதிருவண்ணாமலையிலிருந்து  எழுத்தாளர், கதை சொல்லி, சமூக  சிந்தனாவாதி திரைப்பட நடிகர் என்று பலபலநிறப் பட்டைகளில் ஒளிவீசும் வைரம் பவா  செல்லத்துரை அவர்கள்.

நண்பர்கள் விருப்பப்படி அமெரிக்காவிற்கு தனது ரசிகர் வட்டாரத்துடன் கலந்து உரையாட வந்துள்ளார்கள்  பவா  அவர்களும் அவரது துணைவியார் கே வி சைலஜா அவர்களும் .

கே வி சைலஜா அவர்களும் சிறந்த கதை சொல்ல எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

இருவரும் சியேட்டிலில் சுமார் 150 தமிழ் அன்பர்களுடன் உரையாடியாது மிகவும் சிறப்பாக இருந்தது.

ஷைலஜா அவர்கள் தான் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த ‘சிதம்பர நினைவுகள்’ மற்றும் பல நூல்களைப் பற்றியும்  அதன் மையக் கருத்தான பெணணீயத்தை உணர்ச்சி பூர்வமாகக் கதையாகச் சொன்னவிதமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  

பவா அவர்கள் அமெரிக்கவாழ் இந்தியர்களைக் கிண்டல் செய்யும் சக்காரியா அவர்களின் மலையாள நாவல் ‘சலாம் அமெரிக்கா’ பற்றிப் பேசிக் கலகலப்பை உருவாக்கினார். அத்துடன் பிரபஞ்சனின் மீன் கதையைப் பற்றியும் மற்றும் அவர் சொல்லும் ஒரு தாத்தா – பல பாட்டிகள் கதையையும் கூறி மகிழ்ச்சி அலை தொடந்து வரச் செய்தார்.  

பின்னர் பவா அவர்கள் பார்வையாளர்கள்  கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்ன விதம் அனைவரையும் கவர்ந்தது.   அதிலும் குறிப்பாக அமேரிக்கா வாழ் மக்கள் இந்தியாவில் ஆர்கானிக் விவசாயம் செய்யமுடியுமா? புலம் பெயர்ந்த மக்கள் என்ன கதை எழுதலாம் ? என்ற கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் மனதைத் தொடும் அளவிற்கு இருந்தது.

அவர் என்ன சொன்னார்? கே வி சைலாஜா அவர்கள் சொன்ன கதைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள சியேட்டில் நகரில் அவர்கள் பேசிய உரையின்  காணொளியைக் கேளுங்கள்.