பிரபாராஜன் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டிற்கான ‘பெண்களை மையப்படுத்தும் சிறுகதைகள் போட்டி’க்கு வந்த கதைகளில் முதல் 3 கதைகளைத்தேர்ந்தெடுக்க என்னைக்கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றி. அதை மிகக் கௌரவமானதாகக் கருதுகிறேன். பெண்களை மைய்யப்படுத்தி எழுதப்பட்ட கதைகள் அதற்கு ஏற்ற வகையில்
பெண்களின் இயல்பையும் , நேர்மையையும் ஆதங்கங்களையும் கனவுகளையும் எனக்கு அனுப்பப்பட்டிருக்கும் 13 கதைகளிலும் எளிய நடையில், பல பேச்சு மொழியிலும் அழகாக எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
பரிசளிக்க தரத்தை வகைப்படுத்தவேண்டி மூன்று சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கதை. மூளை வளர்ச்சி குன்றிய பெண்ணை வளர்த்து ஆளாக்கி அவளை யார் பார்த்துக்கொள்வார்கள் எனக்குப்பின்னால் என்று கவலைப்படும் தாய் , அவள் இறந்த பிறகு நிம்மதி அடைவதாக துக்கத்துடன் பின்னோக்கிச் சென்று சொல்வது மிக இயல்பாக நயம்படக் கதை விரிகிறது. அழகாக முடிகிறது.
சிறுகதை என்பது படைப்பிலக்கியத்தில் வசீகரமான கட்டுக்கோப்பு. இரண்டு வரிகளிலும் சொல்லல்லாம் . 2000 சொற்களிலும் , 20 பக்கங்களிலும் வடிவமைக்கலாம். கதை அம்சம் இருந்தால் போதாது. வடிவமும், கட்டமைப்பும், அழகியலும் பார்வையின் நுட்பமும் சேரும்போது படிப்பவரின் மனத்தை ஆட்கொள்கிறது.
தேந்தெடுக்கப் பட்டவர்கள் :
பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தவர் : எழுத்தாளர் வாஸந்தி
நடுவர்கள் : லதா ரகுநாதன், பானுமதி , வைதேகி
1. நந்து சுந்து – வேலம்மா (முதல் பரிசு) Rs, 5000
2. திருமதி.நேசா – அழுக்கு மூக்குத்தி (இரண்டாம் பரிசு) Rs 3000
.3. ஜி ஏ பிரபா – சூடா ஒரு கப் காபி ( மூன்றாம் பரிசு) Rs 2000
Rs 1000 பெறும் மற்ற கதைகள்
4. ஜே. செல்லம் ஜெரினா – வாழ்வின் வரமாய்….!
5,. ஜெரா – எப்படியும் சந்திப்போம்”!
6. எல் எல் நாணு – அடி
7 . ஜெயந்தி ரமணி – அடிமாடு
8. . ராணி கணேஷ் – கல்யாண சாவு
9. . முகில் செல்வராஜ் – மலர்வாய் மலரே…
10. புனிதா பார்த்திபன் – ஒற்றைத் தூண்
11. க.இராஜசேகரன் – வேலம்மா தொழிலுக்குப் புதுசு
12. ஸ்ரீவித்யா பசுபதி – மாயவலை
13. கூடலூர் அன்வர்ஷாஜி – திராட்சைக் கொடி படராத மினாரங்கள்
அறக்கட்டளை எனும் அகத்தூண்டல்! – சிறகு இரவி
இன்றைய நிகழ்வு இரு பகுதிகள் கொண்டது. முதலாவது இரு சாதனைப் பெண்மணிகளுக்கு விருதும் பட்டயமும். ஒருவர் பத்மா மணி ( அகவை 91 ) இன்னொருவர் பத்மா ராஜன் ( அகவை 84 ). இருவருக்கும் பெயரில் பத்மம் இருப்பதால், இதை பத்ம விருதுகள் என்று கூட அழைக்கலாம்.
இன்று (10.02.2024) மாலை சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகரா ஹாலில் “பிரபா ராஜன்” 11ஆம் ஆண்டு நினைவுக் கூட்டம் & குவிகம் பதிப்பகத்தின் 200ஆவது நூல் வெளியீடு இறைவணக்கத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.எழுத்தாளரும், பிரபா ராஜன் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு. ராஜன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான எழுத்தாள மருத்துவர் திரு. முருகு சுந்தரம் குவிகத்தின் 200ஆவது நூலை வெளியிட்டார். முதல் பிரதியை மணிமேகலைப் பிரசுரம் உரிமையாளர் திரு. ரவி தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார். நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிமூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன.
இதில் “வேலம்மா” என்ற சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. 5000 ஆசிரியர் நந்து சுந்துவுக்கும், இரண்டாவது பரிசு ரூ. 3000″அழுக்கு மூக்குத்தி” சிறுகதை ஆசிரியர் நேசாவுக்கும், மூன்றாவது பரிசு ரூ. 2000 “சூடா ஒருகப் காப்பி” சிறுகதை ஆசிரியர் ஜி.ஏ.பிரபாவுக்கும் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் தொண்ணூறு வயதான திருமதி பத்மா ராஜன், எண்பது வயதான திருமதி பத்மா மணி ஆகியோருக்கு “PRTF Role Model Awards” வழங்கப் பட்டது.
வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டு சமுதாயத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற இந்த இரண்டு பெண்மணிகளின் திறமையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி கிரிஜா ராகவன் (ஆசிரியர், லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ்) பட்டியலிட்டபோது சபையே கரகோஷம் செய்து மகிழ்ந்தது.மருத்துவர் முருகு சுந்தரம் அவர்களின் உரையைக் கேட்டவர்ககளுக்கு நரையே வராது; நரை வந்தவர்களுக்கு மனத்தில் குறையே வராது. ஜிகினா வார்த்தைகள் இல்லாத எளிமையான அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.
குவிகம் அமைப்பாளர்களில் ஒருவரான திரு. கிருபானந்தன் குவிகத்தின் தொடக்க காலம் முதல் இன்று வரையான வளர்ச்சிக்குத் துணையான எழுத்தாளர்கள், வாசகர்களின் ஒத்துழைப்பை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
நிறைவாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி கிரிஜா ராகவன் நன்றியுரை கூற,
“வாழியச் செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தே மாதரம், வந்தே மாதரம் “
என்று அனைவரும் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.
அரங்கத்தில் ” வேலம்மா” என்ற சிறுகதைத் தொகுப்பு ரூ.100 க்குத் தரப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவர் எஸ். முருகுசுந்தரம் எழுதிய “டாக்டர் வள்ளுவர்” என்ற நூலை மருத்துவரே வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஜாங்கிரி, போண்டா, காப்பியும் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்வின் காணொளி :






