இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச்  சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தேன். (முடிவுத் தேதி 3-011-2024).

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச்  சிறுகதைப்  போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப்  போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

அதேசமயம் போட்டியின் அமைப்பாளர் என்ற வகையில் எனக்கு மிகப் பெரியதொரு வருத்தம் ஏற்பட்டது.  அது என்னவென்றால், இந்த 355 கதைகளில் வெறும் 10 கதைகள் மட்டுமே பரிசுக்கு உரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 300 க்கும் மேற்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்படாமல் விடுபட வேண்டும். பரிசு பெறப்போகும் 10 பேரின் நன்மதிப்பை நாங்கள் பெறும் அதேசமயத்தில், மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதி ஆவலோடு முடிவுக்குக் காத்திருக்கும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை எங்களுக்கு ஏற்பட்டது.  

இந்த வருத்தத்தை ஓரளவு சரிக்கட்டுவதற்காக அறக்கட்டளையின் உறுப்பினர்களும் நடுவர்களும் தமக்குள் ஆலோசித்து, மேலும் 25 பேருக்கு “பாராட்டுக்குரிய கதைகள்”  என்ற அங்கீகாரத்தை வழங்கிடலாம் என்று  முடிவு செய்தார்கள் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 25 பேருக்கும் சன்மானமாக, தலா ரூபாய் 1001 வழங்கப்படும் என்பதையும் நீங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஏற்கெனவே அறிவித்தபடி இந்தக் கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளியாகும். ரூ.5000 பரிசு பெறும் பத்துக் கதைகள் ஒரு நூலாகவும், மற்ற 25 கதைகளும் இன்னொரு நூலாகவும் வெளியிடலாம் என்று தற்காலிகமாக யோசிக்கிறோம். சென்னையில் எதிர்வரும் புத்தகக் கண்காட்சி காரணமாக நூல்களின் தயாரிப்பு சற்று தாமதமாகலாம் என்று தெரிகிறது. விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும்.

மிகச் சிறந்த விழா நிகழ்வு ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு பெறாத நண்பர்கள்  எங்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டுகிறோம்.

இனி முதல் பட்டியலாக, ரூ.5000 பெறும் பத்துக் கதைகளின் விவரங்களைக் கீழே காணலாம்:

(கதைகள் எங்களுக்கு வந்துசேர்ந்த தேதியின் அடிப்படையிலான வரிசை இது. மற்றப்படி, எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தை உடையவை ஆகும்.)

எண் கதையின் தலைப்பு ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல்
1 இன்றே இப்படம் கடைசி அறிவுச்செல்வன், மணப்பாறை arivuchelvan62@gmail.com 
2 சந்தித்த வேளை முத்துசெல்வன், முசிறி muthsan20@gmail.com
3 மகாராணி அவனை ஆளலாம் ஜீவி (ஜீ. வெங்கடராமன்), சென்னை jeeveeji@gmail.com
4 தங்கரதம் ஹரணி (டாக்டர் அன்பழகன்), தஞ்சாவூர்  uthraperumal@gmail.com
5 சந்திரா என். சிவநேசன், ஆரியப்பாளையம், சேலம் (மா).   nsivanesan1988@gmail.com
6 பின்னணி நட்சத்திரம் பத்மினி பட்டாபிராமன், சென்னை patturamini@gmail.com
7 முதல் மருத்துவர் டாக்டர் ஜெ  பாஸ்கரன், சென்னை bhaskaran_jayaraman@yahoo.com
8 ஊடாடும் பெருநிழல் யதார்த்தா பென்னேஸ்வரன், கிருஷ்ணகிரி  kpenneswaran@gmail.com
9 வேண்டுதல் மீ. மணிகண்டன், டெக்சாஸ், அமெரிக்கா  nam.manikandan@gmail.com
10 முடிவு கிரிஜா ராகவன், சென்னை girijaraghavanls@gmail.com

கீழுள்ள பட்டியலில் ரூ. 1001 பரிசு பெறும் 25  “பாராட்டுக்குரிய” சிறுகதைகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன..

எண் கதையின் தலைப்பு ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல்
1 சிங்கிள் பேரண்ட் சாரதா ஸ்ரீநிவாசன், சென்னை sandhiv007@yahoo.com
2 விடுதலையின் தூரம் சு ரகுநாத், மதுரை paaduvaasi@gmail.com
3 மஞ்சக் கலருல ஒருபுடவ  கமலா முரளி, சென்னை kamalamurali63@gmail.com
4 காட்சிப் பிழை கல்பனா சந்யாசி, சென்னை     kalpana.sanyasi@gmail.com
5 நீதிக்குத் தண்டனை என். நித்யா, திருப்பூர்  nithyanagaraj2020@gmail.com
6 நாடகம் அகிலன் கண்ணன், சென்னை akilankannanpersonal@gmail.com
7 நீங்காது பூமாது லதா சுப்ரமணியம், சென்னை subramaniamlatha@gmail.com
8 மாலி எஸ். ராமசுப்ரமணியன், சென்னை essorres@gmail.com
9 வளையோசை ரேவதி பாலு, சென்னை  revathy2401@yahoo.com
10 அறம் செய்ய விரும்பு சாந்தி சந்திரசேகரன், திருவாரூர் santhichandrashekaran@gmail.com 
11 சலூன் ச சுரேஷ், கலிபோர்னியா shompens@gmail.com
12 வழித்துணை இந்திரா நீலன் சுரேஷ், சென்னை sureshkrenganathan@gmail.com
13 சுரண்டல்கள் நா.பா. மீரா, சென்னை  parthasarathy.meera@gmail.com
14 காலம் என்ற நீட்சியுடன் கே. எஸ். சுதாகர், ஆஸ்திரேலியா kssutha@hotmail.com
15 தையலின் தடம் முகிலன் அப்பர், சென்னை paaventharrasigan@gmail.com
16 கரையேற்றம் வசந்தா கோவிந்தராஜன், சென்னை vasanthagovindarajan4@gmail.com
17 கீரோபதேசம் உஷாதீபன், சென்னை ushadeepan@gmail.com
18 கிருஷ்ணன் என்னும் சாரதி எச் என் ஹரிஹரன், சென்னை hariharan.hnh@gmail.com
19 சகரியதா எஸ் எல் நாணு, சென்னை slnaanu@gmail.com
20 மார்ட்டின் வாத்தியார் பி. ஸ்ரீராம் சென்னைsri.esi89@gmail.com
21 குள்ளம் அழகியசிங்கர், சென்னை azhagiyasingar.virutcham@gmail.com
22 மூன்றாம் தளம், 301 ஆம் வீடு எம் சங்கர், சென்னை emyes_04@yahoo.co.in
23 ரேணுப்பாட்டியும் பாக்குவெட்டியும் புலியூர் அனந்து, சென்னை  puliyoor_ananth@yahoo.com
24 இரப்பன் பரிவை சே குமார், அபுதாபி  kumar006@gmail.com
25 ஒரு பிரியமான கதை ஸ்ரீமதி ரவி, சென்னை srisriravichandran@gmail.com