1.
நாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும்.
2.
இதழ் என்று மனிதனின் உதட்டை சொல்வார்கள்.
3.
உதடுகள் துடித்தால் பெருங்குடல் சிறுகுடல் நோய் வருவதற்கு அறிகுறி.
4.
நோய் என்பது வாதம், பித்தம் , சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே ஆகும்
5.
குறை ஒன்றுமில்லை என்ற பாடல் 1967ல் இராஜாஜி எழுதி, தமிழ் இதழான கல்கியில் வெளியிடப்பட்டது.
6.
கல்கி கோய்ச்லின், “தேவ். டி” என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்ஃபேர் விருதைப் பெற்றார்.
7.
ஃபேர் & லவ்லி, தற்பொழுது க்லோ & லவ்லி என்ற பெயரில், சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது
8.
பங்குச் சந்தை உலகில் முதல் முதலாக டச் (Dutch) நாட்டில் தொடங்கப்பட்டது
9.
லோ டச் என்று நெதர்லாந்தையும் ஹை டச் என்று ஜெர்மனயும் சொல்வார்கள்.
10.
ஜெர்மன் ஷெப்பர்ட்டுக்கு (நாய் வகை) மற்றொரு பெயர் அல்சேஷன்.
11.
TN சேஷன் அவர்கள், போலீஸ் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதில் சேராமல், 1954ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955 IASல் சேர்ந்தார்.
12.
தேர்வை (நவீன பரீட்சை முறை) முதன்முதலில் 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி பிஷல் கண்டுபிடித்தார்.
13.
ஹென்றி மூர் வடிவமைத்த இரண்டு டன் எடையுள்ள சாய்வு உருவம் அறக்கட்டளையின் மைதானத்திலிருந்து டிசம்பர் 2005-ல் கிரேன் மூலம் ஒரு லாரியில் ஏற்றப்பட்டது, ஆனால் அது இன்று வரை மீட்கப்படவில்லை.
14.
இந்தியாவில் லாரியை ஒட்டிய முதல் பெண் யோகிதா ரகுவன்ஷி, ஒரு வழக்குரைஞர் ஆவார்.
15.
மங்கல வழக்கு என்பது
சில துக்ககரமான நிகழ்வுகளை நல்ல வார்த்தைகளால் குறிப்பிடுவது.
16.
“வார்த்தை” என்னும் சொல், திருக்குறள் முதலிய முற்கால தமிழ் இலக்கிய நூல்களில் பயன்படுத்தவில்லை. பகுபதம் என்னும் இலக்கணத்தில் “வார்த்தை” என்ற சொல் பொருந்தாது.
17.
சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது
18.
ரோஜா இதழ் குளியல் மனதிற்கும் உடலுக்கும் நல்லது செய்யும்

கல்கண்டுச் சங்கிலி
LikeLike