Va. Ve... - Dr. Lakshmi Ramaswamy's Sri Mudhraalayaகுவிகத்தின் இணைய தளத்தின் மூலம் முனைவர் வ வே சு அவர்கள் வழங்கி வருகின்ற மகா கவியின் மந்திரச் சொற்கள் தொடரின் 200 வது நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. 

200 வாரங்களாக வ வே சு அவர்களின் சொல் மழையில் நனைந்துத் திளைத்த பாரதி அன்பர்கள் அனைவரும் ஒருமித்தமாக வ வே சு அவர்களைப் பாராட்டி குருவிற்கு வந்தனம் தெரிவித்தனர். 

எழுத்தாளர் சிவசங்கரி அம்மையார் இப்படிப்பட்ட குருவிற்கு குரு  தட்சணையாக எதைக்  கொடுத்தாலும் தகும்  என்று சிலாகித்துப் பேசினார்கள். 

அதைத் தொடர்ந்து குவிகம் வ வே சு அவர்களுக்கு ஒரு ஆவணப் படம் எடுத்து அதனை  குரு தட்சிணையாக -காணிக்கையாகக் கொடுக்க விரும்புகிறது என்ற தகவலைப் பகிர்ந்தவுடன் கூடியிருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரித்தனர். 

வ வே சு அவர்களின்  200 வார உரையும்  குவிகம் இலக்கியவாசல் யூ டியூப் சானலில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கப்பட்டது. அந்தக் காணொளிக்கான PLAY LIST களும் நண்பர்களுக்குப் பகிரப் பட்டன.

 

அவற்றின் விவரம் இதோ !