ஆனந்த் பிளாட்ஸ் புத்தாண்டு 2014 சிறுவர்களுக்கான தமிழ்க்
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
( ராகுல் .எஸ் D1/18)


அறமும் பொருளும், , நலனும் அருளும்
நாளும் பொழுதும், வளர்ந்து பொங்கிய
ஓங்கிய நிலையில், தேங்கிய புகழில்
வாழ்வின் பொருளை வையகம் அறிந்திட
தோன்றிய பாரதம் ஊன்றிய பேதத்தால்
புகுந்திட்ட மொகலாயர் இருநூறு ஆண்டுகள்
சீர்களை சிதைத்து , வன்மத்தை பெருக்கிட
விட்டதை அழிக்க வெள்ளையர் நுழைந்திட
மீண்டும் இருநூறு ஆண்டுகள் அடிமை சேற்றில்
அனைத்தையும் இழந்து ஆதரவு இன்றி
தன்மானம் இழந்து சேவகம் புரிந்து
கைகட்டி வாய்மூடி கண்மூடி பின் சென்று
செக்கை இழுத்தும் கல்லை உடைத்தும்
பிராணிகள் தோல் முடி கைகளால் பிய்த்தும்
தூக்குக் கயிற்றில் தொங்கிய வீரர்கள்
குண்டடிபட்ட உயர்குல விளக்குகளும்
சவமாய் விழுந்த கணக்கை எல்லாம்
ஆய்ந்து அறிய ஆயுளும் இல்லாது
சிந்திய ரத்தமும் தாக்கிய துயரமும்
முடிந்தது ஒருநாள் என்று களிக்கவும்
இன்று அயலார் விதைத்த விதைகள் எல்லாம்
களையாய் முளைத்து தொடரும் அபாயம்
விலகும் நாள் தான் வருமோ இனியும்?
பண்டைய பாரதம் மலருமோ இனியும்?
