
உள்ளத்திலே உள்ள கதை சொல்லிவிடவா
கள்ளத்திலே உன் அழகைக் கிள்ளிவிடவா
கன்னத்திலே முத்த மழை சிந்திவிடவா
எண்ணத்திலே சித்தமதை தந்து விடவா
பெண்மயிலே உன்சிறகை விட்டுவிட்டு வா
காண்கையிலே என் விழியைச் சுட்டுவிட்டு வா
உன்கையிலே கணை தொடுத்துக் கொன்று விட வா
புன்னகையில் எனை மடித்து மென்றுவிட வா
வெள்ளியென மின் இடையில் கன்னமிடவா
வெள்ளமென உன் ஜடையில் பின்னிவிடவா
கிள்ளையென உன் மடியில் பிஞ்சுவிடவா
பிள்ளையினை நம் இடையில் கொஞ்சிவிடவா
கண்ணசைவில் கவிதை நயம் திறந்துவிடவா
பெண்ணசைவில் அத்தனையும் மறந்துவிடவா
என்னவளைக் கரம்பற்றி ஈர்த்துக் கொள்ளவா
உன்னுருவில் என்னுயிரை சேர்த்துக் கொள்ளவா

