This gallery contains 4 photos.
சென்னைக்கு வயது 375
சென்னை நகரம் தனது 375வது பிறந்த நாளைக் கொண்டாடியது!
நாமும் அதன் பழைய படங்களைப் பார்ப்போமே!
சென்னையின் 375 வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரை டிப்ஸ் வழங்கும் கமலஹாசன்!
கமல் கூறியதாவது :
ஒரு கடற்கரை கிராமமாகத் தொடங்கி பல படையெடுப்பிற்குப் பின் ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்ட ஒரு அழகான தீவு சென்னை. இரண்டாற்றங்கரை என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றங்கரை தான். அதற்கு இன்று 375 வயது ஆகியிருக்கிறது. இந்த இளம் தாயை, இரண்டு ஆறுகள் கொண்ட இரண்டாற்றங்கரையை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக்கிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு. இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதைச் செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்துப் புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையென்றால் இக்காலகட்ட நம் சரித்திரம் நல்ல இரண்டு நதிகளை சாக்கடையாக்கிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும். அதை நினைவில் வைத்துக்கொண்டு பெற்றதைக் கொண்டாடுவோம்! கற்றதைப் போற்றுவோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு!
கமல் பகிர்ந்ததைக் கேட்டீர்கள்!
இப்போ R J பாலாஜி அந்தக் கால சென்னை மன்னிக்கவும் மெட்ராஸ் நினைவுகளை எப்படிக் கலாய்க்கிறார் என்று கேளுங்கள்!
25 முதல் 60 வயது வரை இருக்கும் சென்னை வாழ் மக்கள் அனைவரும் பாலாஜி சொல்வதை 80 சதவீதம் ஒத்துக் கொள்வீர்கள்!
இன்னா பிரதர் ! சும்மா செந்தமில்லே பேசிகினு கீரொம்! பேஜாரா இல்லே! நம்ம குஜாலுக்கா மெட்ராஸ் தமில்லே பேசுவோம்!
இத்தப்பாருபா வெக்கத்தை!
இத்தெல்லாம் பேச இப்ப கண்டிக்கு ஆளே இல்லே நைனா! இத்து ஒண்ணும் ராங்க் இல்லே! அப்பாலே பாஷையே புட்டுக்கும் போலருக்கு! நாம தான் வாத்யாரே இத்துக்கு உசிரு குடுக்கணும்!
நல்லா படி நைனா! மஜாவா இருக்கும்!
மெ ட்ராஸ் பாஷை வார்த்தைகள் தெரிந்துகொள்ள /நினைவில் கொள்ள மேலே இருக்கும் பகுதியைக் க்ளிக் செய்யுங்கள் !படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!
இதில் இல்லாத புதிய வார்த்தைகளைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பரிசு உண்டு.
ராமருக்கு கோயில் கட்டப் போறேண்டா – அதில்
பாபருக்கு சிலை வைக்கப் போறேண்டா !
ஜீசஸைக் கும்பிடத் தான் போறேண்டா – அவர்
தேஜஸுக்கு மண்டியிட வாறேண்டா !
அல்லாவைத் தொழுதிடத் தான் போறேண்டா – அவர்
எல்லார்க்கும் நல்லதையே தர்வார்டா !
கண்ணன் சொன்ன கீதையைத்தான் கேளேண்டா
கர்த்தரின் பைபிளைத்தான் படியேண்டா
அல்லாவின் குரானைத்தான் ஒதேண்டா
எல்லாமே ஒண்ணு தாண்ணு புரியும்டா !
கணபதிக்குத் தோப்புக்கரணம் போடேண்டா
மரண பயம் உன்னை விட்டு போகும்டா !
மாதாகோவிலில் மெழுகுவர்த்தி ஏத்தேண்டா
மனசில் உள்ள இருட்டெல்லாம் மறையும்டா
அஞ்சு வேளை பள்ளி வாசல் செல்வோம்டா
அஞ்சுகிற தீமையெல்லாம் தொலையும்டா !
ஆண்டவன் எல்லோருக்கும் ஒண்ணு ஒண்ணு – அதை
அறியாதவன் தலையிலெல்லாம் மண்ணு மண்ணு தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ நல்லாத் தெரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ எல்லாம் புரிஞ்சுக்கோ !!
க்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!
ஒரு சிறுகதை, நாவல், (சில சமயம்) கவிதை படித்தால் ஒரு அபிப்பிராயம் தோன்றுவது சகஜம். சில சமயங்களில் அவற்றை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் மேலும் எதைப் படிக்கலாம் என்ற ஐடியாவும் கிடைக்கும்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் திரு குமரி அனந்தன் எழுதிய நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் சின்ன அண்ணாமலை அவர்கள் பேசும்போது பேசுவது ஒருகலை என்றால் பேச்சைக் கேட்பதும் ஒரு கலை, சமையல் ஒரு கலை என்றால் சாப்பிடுவதும் ஒரு கலை என்றார். அதுபோல எழுதுவது ஒரு கலை என்றால் விமர்சனமும் ஒரு கலை தானே?.
கருத்து சொல்லும்போதைவிட எழுதும்போது மிகக் கவனமாய் இருக்கவேண்டி உள்ளது. பல விமர்சகர்கள் “வேஸ்ட்” “தண்டம்” என்றெல்லாம் எழுதுவது படைத்தவரை மட்டுமல்லாமல் அதை ரசிப்பவரையும் மதிப்பிடுவது என்றாகிறது. ஒரு பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒரு நேர்காணலில் ஒரு கதை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது சரி, ஆனால் நன்றாக இல்லை என்று சொல்லவேண்டாமே என்றார்..
ஒரு பேராசிரிய நண்பர் “தரமில்லாப் படைப்புகளை பாராட்டுவது அந்த எழுத்தாளர் வளர விடாமல் தடுக்கிறது” என்று சொல்லுவார். விமர்சகர்கள் சிலரை குட்டிக் கெடுக்கிறார்கள் அல்லது சிலரை நக்கிக் கெடுக்கிறார்கள் என்று மலையாளத்தில் ஒரு பேச்சு உண்டாம்
ஒருமுறை எழுத்தாளரின் முன்னிலையில் நடந்த விமர்சன நிகழ்ச்சியில் விமர்சனங்கள் சற்று கடுமையாகவே இருந்தன. அந்த எழுத்தாளரும் சற்று கடுமையாகவே மறுமொழி அளித்தார்.
நண்பர் ஒருவர் அச்சமயம். படைப்பு வெளியான பிறகு அது பொதுவில் வந்துவிடுகிறது. சாதகமாகவோ பாதகமாகவோ விமர்சிக்கப்பட்டால் எழுத்தாளர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கோபித்துக்கொள்வது ஏன்? மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது என்று எதிர்பார்த்தால் நீங்கள் இனி உங்கள் டைரியிலேயே எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என்று ஒரு போடுபோட்டார்.
படைப்பு பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லாமல் ‘பிரிண்ட் நல்லாயிருக்கு. பெரிய எழுத்தில் போட்டிருப்பது படிக்க ரொம்ப சௌஹரியம்’ என்று நழுவுவதையும் பார்த்திருக்கிறோம். சிலர் “கோட்பாடு”, “உத்தி”, “உலக இலக்கியத்தரம்”, “கட்டமைப்பு” என்றெல்லாம் வேறு அலைவரிசையில் எழுதுவார்கள். அதெல்லாம் எனக்கு “bouncer”
எந்த ஒரு படைப்பாளியும் தனது படைப்புகள் பேசப்பட வேண்டும் என விரும்புவது இயற்கை. அதுபோல் விமர்சகரும் தனது விமர்சனங்கள் பலரைப் போய்ச்சேர வேண்டும் என விரும்புகிறார். விமர்சனங்களும் விமர்சிக்கப்படுகின்றன.
சில வலைப்பூக்களில் வந்த விமர்சன மறுமொழிகளுக்கு விமர்சகர் காட்டமாக பதில் அளித்திருந்தார். ஒரு விமர்சகர் தனது விமர்சனம் விமர்சிக்கப்படுவதை விரும்பாதது ஒரு தமாஷ்தான்.
இதன் பின்னணியில் ஒரு விமர்சனத் தொடர் …
முதலில் ந.பிச்சமூர்த்தி. – அடுத்த இதழில் பார்ப்போம்!
கோகுலாஷ்டமி -ஜன்மாஷ்டமி என்றெல்லாம் கொண்டாடப்படும் கிருஷ்ணனின் பிறந்த நாள்வைபவத்தில் அவர் அவதரித்த மதுராவில் – அவர் தவழ்ந்த கோகுலத்தில்- அவர் விளையாடிய பிருந்தாவனத்தில் நமது மனம் என்றென்றும் ஐக்கியம் செய்து கொள்ள விழைகிறது.
மதுரா- பிருந்தாவனில் கட்டப்பட்டுள்ள புதிய வண்ண வண்ணக் கலவையான ‘ப்ரேம் மந்திர்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணன் கோவில் – கிருபாள்ஜி அவர்களால் கட்டப்பட்டது. அந்த அழகிய அன்புக் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் ஓவியங்களும் நமது குவிகத்தை அலங்கரிக்கின்றன.
மாமுனிவர் பிருகுமகளாம் திருமகளே போற்றி
கமலத்தை யுறைவிடமாய்க் கொண்டவளே போற்றி
எம்பெருமான் திருமாலின் ஈரமிகு நெஞ்சினிலே
கொலுவிருக்கும் கோதையே குலமகளே போற்றி
தாமோதரன் மனையாளே அருகிருந்து காப்பவளே
அன்பின் திருவுருவே குணவதியே போற்றி
தேமதுர இன்னிசையின் நாதத்தின் வடிவினளாய்
திகட்டாத இனிமையைத் தருபவளே போற்றி
இருள்நீக்கு மொளிவடிவா யிருப்பவளே போற்றி
செல்வங்க ளனைத்திற்கும் தலைவியே போற்றி
தரணிவாழ் மாந்தர்கள் வானுறை தேவர்கள்
பரணிபாடி கொண்டாடும் நாயகியே போற்றி
அருள்சொரியும் எழில்கொஞ்சும் கமலக்கண் பார்வையினால்
உலகினையே காக்கின்ற தேவிநின் தாள் போற்றி
சார்ங்கமெனும் வில்லினையே ஆயுதமா யேந்தி நிற்கும்
திருமாலின் துணையாளே திருமகளே போற்றி
செந்தாமரை மலர்களது மிருதுவான இதழ்கள் போல்
மெலிதான எழிலான கண்களையு முடையவளே
சிந்தையெலா முனைநினைத்து ஆழ்மனதில் பொங்கிவரும்
அன்பையும் பக்தியையும் கரைத்தே யுருவாக்கி
அந்தியிலும் காலையிலும் அனுதினமும் துதிப்போர்க்கு
செல்வங்கள் பதவிகள் ஆனந்தம் வந்தெய்தும்
சிந்தியாது செய்துவிட்ட பாவங்கள் மறைந்துவிட
பூஜித்த பலன்களவை பக்தரெமைக் காக்கட்டும்
பூரிக்க வைக்கும் புதன்
பொன் கிட்டியும் கிட்டாத புதன்
நல்லவை யாவும் துவங்கும் புதன்
புத்தியும் சித்தியும் சேர்ந்த புதன்
புதுமையை அள்ளித் தந்திடும் புதன்
ஐந்து வேலை நாட்களில் நடுவன் புதன்
ஏழு வார நாட்களில் நடுவன் புதன்
அப் புதன் நாட்களில் அற்புதம் விளைந்திடும்
அப் புதன் நாட்களில் அர்த்தமும் விளங்கிடுவோம்
சதமென்று வந்தால் சதா சிவனைக் காண்போம்
பதமென்று வந்தால் பரம சிவனைக் காண்போம்
நிதமென்று வந்தால் நீல கண்டனைக் காண்போம்
புதனென்று வந்தால் பூத நாயகனைக் காண்போம்
மத்த மதியனை தொழுது வணங்குவோம்
சித்த வாசனைப் பணிந்து வணங்குவோம்
புத்த போதனை உணர்ந்து வணங்குவோம்
புதன் நாயகனை வணங்கி வாழ்த்துவோம்
முதல் தமிழ் பேசும் படம் வெளியானது 31 அக்டோபர் 1931 ல் ( தீபாவளி ரிலீஸ்)
படத்தின் பெயர்: காளிதாஸ்
காளிதாஸ் பற்றிய சில தகவல்கள்:
ஹீரோயின் : டி.பி. ராஜலக்ஷ்மி
ஹீரோ: பி. ஜி. வெங்கடேசன்
இசை : பாஸ்கர தாஸ்
மற்ற நடிகர்: எல் வி பிரசாத்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் பேசி நடித்த படம். அதனால் விமர்சகர்கள் இதை முதல் தமிழ்ப் படம் என்பதை விட முதல் பல-மொழிப் படம் என்றே சொல்வார்கள்.
படப் பெட்டியை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து சினிமா தியேட்டர் வரை நூற்றுக்கணக்கான மக்கள் ரோஜா மலர் தூவி , ஊதுபத்தி கொளுத்தி, தேங்காய் உடைத்துக் கொண்டாடினார்களாம்.(அந்த பக்தி இன்னும் தொடர்கிறது)
8000 ரூபாயில் எடுத்த படம் 75000 கலெக்சன் கட்டியதாம்!
காளிதாஸ் படத்துடன் மக்கள் ரசனைக்காகக் குறத்தி நடனம் என்ற பிட்டும் போடப்பட்டதாம்!
ரிடேக் எடுக்கலாம்!
இன்னொரு பொம்மை!
எனக்கு அந்த பொம்மையை வாங்கிக் கொடு’ என்று பொம்மைக் கடையை விட்டு நகர மறுத்து அடம் பிடித்தான் எனது மூன்று வயது மகன்.
இதோ பார்! உனக்கு நான் இனி விளையாட்டு பொம்மை வாங்கித் தரமாட்டேன். நேற்று நான் ஒரு பொம்மை வாங்கித்தந்தேன். அதை வீடு சேர்வதற்குள் உடைச்சுட்டே!’ என்று கூறியவளை இடை மறித்து ‘அதுதான்மா ..அது உடைஞ்சு போச்சே.. எனக்கு வேறொண்ணு வேண்டாமா.. அதுதான் வாங்கித் தரச் சொல்றேன்’ என்றானே பார்க்காலாம்!
க்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!