“புன்னாக வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”






அறுபத்து மூவர் விழா என்று அழைக்கப்படும் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் நடத்தும் பங்குனிப் பெருவிழா மாற்று விடையாற்றி காலை விழா இந்த ஆண்டும் வழக்கம் போல் கோலாகலத்துடன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றது.
முக்கியமான நிகழ்ச்சிகள்
- கொடியேற்றம்,
- அதிகார நந்தி காட்சி,
- திருத் தேர் வடம் பிடித்தல்,
- வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சி ,
- ஐந்திருமேனி திருவீதி உலா,
- மறையோதல்,
- திருமுறையோதல்
- தேவாரப் பண்ணிசை
- சொற்பொழிவு,
- கலை நிகழ்ச்சிகள்
கண் கொள்ளாக் காட்சிகள்! பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
