
முதல் அரைமணி நேரம் பார்க்கும் போது ‘அவ்வளவு தான். ஒய்.ஜி.மகேந்திரன் பழைய பெருங்காய டப்பாகிவிட்டார் என்று தீர்மானம் செய்து பாதியிலேயே கிளம்பிவிடலாம் என்று தோணும்.
ஆனால் நாடகத்தில் அந்த ட்விஸ்ட் வந்த பிறகு – அதாவது – அசடாக இருந்த அவர் எப்படி புத்திசாலியாக தன்னைப் பழித்தவரைப் பழிவாங்கும் வில்லனாக மாறுகிறார் என்றதும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சில இடங்களில் அவர் பேசும் பஞ்ச் டயலாக் கை தட்டலை வாங்குகிறது என்பது உண்மை தான். கடைசியில் பழி வாங்குவது தவறு என்பதை அவர் எல்லாரையும் பழி வாங்கிய பிறகு புரிந்து கொண்டார் என்பது காதுல பூ.
அசடாக இருந்தாலும் மகேந்திரன் ஜோக் அடிக்கணும் அதிலும் அரசியல் இருக்கணும் என்பது விதியா என்ன? . கேஸ் போட சுப்பிரமணிய சுவாமி, டிராபிக் ராமசாமி இருவரையும் பற்றிச் சொல்லும் போது அரங்கம் கலகலக்கிறது. மற்றபடி ஜோக்குகள் சுப்பிணி (அருணாசலத்தில் ரஜினியின் மாமாவாக வரும் இரண்டடி மனிதர்) ஜோக் உட்பட
எல்லாம்
மொக்கை ரகம் தான்.

மகேந்திரனிடமிருந்து இன்னும் வித்தியாசமாக புத்திசாலித் தனமாக எதிர்பார்க்கிறோம். அவர் என்னமோ தியாகராஜ பாகவதர் காலத்தை விட்டு வெளியே வர மாட்டேனென்கிறாரே!
