( 5-9-2015 – கோகுலாஷ்டமி )


எளிதில்லை கண்ணா எளிதில்லை – கலியுகக்
கள்ளரையே வெல்வது எளிதில்லை !
அழுக்குமனக் கம்சன் ஒருவனே அன்று – இங்கு
அதட்டிவரும் கம்சர்கள் ஊரெல்லாம் இன்று
அதர்மத்திலு மோர்தர்மம் இருந்தது அன்று
அதர்மத்தில் அதர்மமே இருக்கிறது இன்று !
நீவென்ற நரகனின் மூச்செல்லாம் நஞ்சு – இங்கு
உலவிவரும் நரகர்கள் உடம்பெல்லாம் நஞ்சு
அன்பாலும் பண்பாலும் ஆட்கொண்டாய் அன்று
அன்பிற்கும் பண்பிற்கும் விலையில்லை இன்று !
அரக்கர்கள் கொட்டத்தை அறவோடு ஒடுக்கிடவே
ஒர்கண்ணன் அவதரித்தான் தரணியில் அப்போது
கலியுக வில்லர்களை பூண்டோடு அழித்திடவே
வீதிக்கொரு கண்ணன் தேவையடா இப்போது !
குழலூதும் கண்ணாநீ யுத்தசங்கு ஊதிடுவாய்
தேரோட்டும் கண்ணாநீ விமானத்தில் வந்திடுவாய்
அம்பெய்த கண்ணாநீ ஏவுகணை ஏவிடுவாய்
வஞ்சகரும் வீழ்ந்திடவே ஹீரோவாய் ஜொலித்திடுவாய் !
பக்கம் ………………………………6
