
அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். அவரது இணையதளம் :
இணையதளத்தில் பல எதிர்ப்புகளைச் சந்தித்தவர்.
இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.
இவரது நாவல் ஸீரோ டிகிரி, ஸ்விட்ஸர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டுபரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 – 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்துமனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து நாளிதழ் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில்ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இவர் எழுதும் பத்திகள் குஷ்வந்த் சிங்கின் எழுத்து அளவுக்குப் பிரசித்தி பெற்றவை.
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவர் பெயர்சொல்லும்.
நாவல்:
எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்
ஸீரோ டிகிரி
ராஸ லீலா
காமரூப கதைகள்
தேகம்
புதிய எக்ஸைல்
சிறுகதைத் தொகுப்பு:
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
கட்டுரைத் தொகுப்பு:
கோணல் பக்கங்கள் – 1
கோணல் பக்கங்கள் – 2
கோணல் பக்கங்கள் – 3
மனம் கொத்திப் பறவை
தப்புத் தாளங்கள்
கலகம் காதல் இசை
தீராக்காதலி
வரம்பு மீறிய பிரதிகள்
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
கடவுளும் நானும்
திசை அறியும் பறவைகள்
மூடுபனிச் சாலை
வாழ்வது எப்படி?
கெட்ட வார்த்தை
கடவுளும் சைத்தானும்
கலையும் காமமும்
மலாவி என்றொரு தேசம்
அருகில் வராதே
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
தாந்தேயின் சிறுத்தை
நாடகம்:
ரெண்டாம் ஆட்டம்
சினிமா விமர்சனம்:
சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்
சினிமா சினிமா
நரகத்திலிருந்து ஒரு குரல்
கனவுகளின் நடனம்
அரசியல் கட்டுரைகள்:
அஸாதி அஸாதி அஸாதி
அதிகாரம் அமைதி சுதந்திரம்
நேர்காணல்கள்:
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
பாலியல் – சாரு நிவேதிதா, நளினி ஜமீலா உரையாடல்
பக்கம் ………………………. 20
