கவிப்பேரொளி நீரை அத்திப்பூ அவர்களின் ஆற்றல் மிகு உழைப்பால் 2011ம்ஆண்டு
தொடங்கிப் படைப்பிலக்கியக் காலாண்டு இதழாக வெற்றிகரமாக வலம்
வந்துகொண்டிருக்கும் “ தகவல் முத்துக்கள் “ பற்றிச் சில தகவல்கள் ….
கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் இதழ்களில் பல்சுவை பயனுள்ள தகவல்களும் இடம்பெறுவது சிறப்பு. இதழின் இன்னொரு சிறப்பு அரசியல் மற்றும் திரைப்படச் செய்திகள் இல்லாமல் வருவது .
அஞ்சல் துறையின் பயிற்சி மைய உதவி இயக்குனராகப் பணி ஒய்வு பெற்றவுடன் “தகவல் முத்துக்கள் “இதழைத் தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீரை.அத்திப்பூ அவர்களின் இயற்பெயர் சே..அப்துல் லத்தீப் .அவரது சொந்த ஊரின் பெயரான “நீர்முளை” இணைந்து நீரை.அத்திப்பூ என்றானது .
நீரை.அத்திப்பூ அவர்கள் எழுதிய நூல்கள் :
வண்ணஒளி எண்ணஅலை சின்னவரி
பாடி விளையாடு பாப்பா
நிலவுக்கே போகலாம்
அறிவியல் கூறும் அற்புத பாடல்கள்
குறுந்செய்திகவிதைகள்
அஞ்சல் தலை அறிய பாட்டு
இதழ்கள் ஏந்திய மலர்கள்
கலாம் பொன்மொழி கவிதை வரிசை -1
சென்னை , திருச்சி ,புதுச்சேரி . காரைக்கால் மற்றும் அண்ணா பல்கலைக்கழகச் சமுதாயப் பண்பலை வானொலியில் இவரது பங்கேற்பு தொடர்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரது பங்கேற்பு கவிதை உரையாடல் விவாதம் எனத் தொடர்கிறது.
குவிகம் இலக்கிய வாசலில் “முகத்தை மறைக்குதோ முகநூல்”
கவியரங்கத் தலைமையேற்று கவிதை மழை பொழிந்து மகிழ்வித்தார் .
கவியரங்க தலைமை ,பட்டி மன்ற நடுவர் ,விழா இணைப்புரை என்ற வகையில் டாக்டர் ஏ .பி .ஜே.அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதை பெருமையுடன் நினைவுகூரும் நீரை.அத்திப்பூ சமீபத்தில் “ கலாம் பொன்மொழி கவிதை வரிசை-1″ என்ற நூலை வெளியிட்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார் .
கவிஞரின் தொடர்புக்கு கைபேசி 94444 46350
email: kaviathippu@yahoo.co.in
.
குவிகம் சிறப்புச் செய்தியாளர் தரும.இராசேந்திரன் , பாபநாசம்