இரண்டு மூன்று செய்திகளைப் பற்றிச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
ஒன்று,

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பற்றி.
நமக்கு எப்போதும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே போட்டி வரும் போது ‘செய்து முடி! கொன்று விடு!’ என்ற வெறி வந்து விடுகிறது. இதை நம் அரசியல்வாதிகளும் ஊடக நண்பர்களும் ஊதி ஊதிப் பெருசு பண்ணுகிறார்கள்! ஒரு மத்திய மந்திரி மேலே ஒரு படி போய் ‘இதில் காசு வாங்கி, வேண்டுமென்றே தோற்று விட்டார்கள். விசாரிக்க கமிஷன் போடவேண்டும்’ என்று பேசுகிறார். விளையாட்டை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தவறில்லை. ஆனால் ‘இவ்வளவு வெறி வேண்டுமா? ‘ தேவையில்லை என்று சொன்னால் ‘தேசப் பற்றில்லாத பதரே ‘என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தக் கருத்தை, ‘சக்தே இந்தியாவில்’ அழகாகச் சொல்லியிருப்பார்கள்.
இரண்டாவது ஜி எஸ் டி

ஜூலை ஒன்றிலிருந்து இந்தியா முழுவதும் அமுல் செய்திருக்கிறார்கள். ரூபாய் – அணா – பைசா காலத்திலிருந்து ரூபாய் – நயாபைசா காலத்துக்கு வந்ததை விட, 500 – 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததைவிடக் கடுமையான செயல் அல்ல. ஆனாலும் மக்கள் இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தேவையில்லாத ஒன்று. ஒரு புதிய முயற்சியை ஆதரிக்க வேண்டியது குடிமகனின் கடமை. இது நாட்டுக்கு நல்லது. அப்படியானால் ஒவ்வொரு வீட்டுக்கும் நல்லது.
மூன்றாவது ,இந்தியா சீனா

இரு நாடுகளும் வரிந்து கட்டிக் கொண்டு இருப்பதைப்போல ஒரு இறுக்கமான நிலை. வல்லரசுகளாக வளர்ந்து வரும் இரு நாடுகளும் இப்படி இருப்பது சரியல்ல. இரு தேசத் தலைவர்களும் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் பேனைப் பெருமாள் ஆக்காமல் அமைதி காக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அது தான் எல்லோருக்கும் நல்லது.
செய்வீங்களா? ( அம்மையார் ஞாபகம் வருதா?)
