Related image

நூல் உலகம் தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி இப்படிக் கூறுகிறது:  

தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களைக் கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டுத் திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களைக் கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச்செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று

தேவதச்சனின் கவிதை ஒன்று: 

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை 
காற்றில் 
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் 
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன 
வெட்ட வெளியில் 
ஆட்டிடையன் ஒருவன் 
மேய்த்துக் கொண்டிருக்கிறான் 
தூரத்து மேகங்களை 
சாலை வாகனங்களை 
மற்றும் சில ஆடுகளை.

விஷ்ணுபுரம் விருது வாங்கியவர் தேவதச்சன்

அவரைப் பற்றிய ஆவணப்படம் இதோ: