
===================================================================
எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்
====================================================================
கோழையான கொசு….இருட்டுக்கு பயம் ,,,பகலில்தான் கடிக்கும்.
சூரியன் உதித்து இரண்டுமணிநேரம் சென்ற பின்னர்தான்…படையெடுக்கும். மாலை ஆறுமணிக்கெல்லாம் அடங்கிப்போகும்….இருந்தாலும் சில வெளிச்சம்இருக்கும் இடத்தில் இரவிலும் கடிக்கும்.
பிறந்த இடத்திலிருந்து 100 அடி தூரத்துக்கு மேலே போகாது….நம்ம வீட்டு கொசு நம்மளையே கடிக்கும்.
முன்னால்வந்து கடிக்காது….பின்னாலிருந்து புறங்கைகள், கணுக்கால்களில் கடிக்கும்
சாதி,மதம்,வயது,ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் ஆண் ,பெண் ,பெரியவர் சிறியவர் குழந்தைகள் வாலிபர்கள்,இளையோர் பெரியோர் என எல்லாரையும் கடிக்கும் ஒருவித கெட்ட கொசு….
சுத்தமான தண்ணீர் தான் அவற்றின் பிறப்பிடம்.
இப்போதைக்கு தமிழ் நாட்டில் தினசரி சராசரி 13 பேர்களை வென்று கொன்றுபோடுகிறது..
ஒழிக கொசுக்கள்.
ஒழிப்போம் டெங்கு
(அருண் சுந்தரின் முகநூலிலிருந்து)
==================================================================
இறைவனுக்கு ‘எச்சில் பரிசுத்தம்’ , ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம், ‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்று ஒரு கோவிலில் எழுதியிருந்தது. அதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
குரு விளக்கினார்.
‘எச்சில் பரிசுத்தம்’ என்பது கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் ‘இறைவனுக்கு’ பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம்.
‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதுதான் ‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’.
====================================================================
சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்?
இத்தனைக்கும் சண்டை போடும் நபர் சமீபத்தில் தான் இருப்பார். அப்படியும் ஏன் சத்தமிடுகிறோம்.
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!
=====================================================================
ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்போகும் படம் ” நியுட்டன்” ; அமீர்கானின் ‘டங்கல் ‘ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்று அவருக்கு வருத்தமாம்.

===============================================================
