பிரபல எழுத்தாளரும் பரிக்க்ஷா நாடகக் குழுவின்  அமைப்பாளரும் அரசியல் விமர்சக வித்தகருமான நண்பர் ஞாநி (15.01.2018) காலை நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

அவர் பிரிவால் வாடும் அனைத்து நல்  உள்ளங்களுக்கும்  குவிகத்தின் மரியாதை கலந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குவிகத்திற்காக “நாடகங்கள் – நேற்று இன்று நாளை ” என்ற தலைப்பில் 19 மார்ச் 2016இல் சிறப்புரை ஆற்றினார்.

ஞாநி என்றும் ஞாநி சங்கர் (1954 – 2018) என்றும் அறியப்படுபவர் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.

இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தினார். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தினார்.  இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் (AAP)  சார்பாக  ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்போட்டியிட்டார். பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.

அவரது படைப்புகள்:

கட்டுரைகள் தொகுப்பு 

பழைய பேப்பர்                                                                                                            மறுபடியும்
கண்டதைச் சொல்லுகிறேன்
கேள்விகள்
மனிதன் பதில்கள்
நெருப்பு மலர்கள்
பேய் அரசு செய்தால்
அயோக்யர்களும்முட்டாள்களும்
கேள்விக் குறியாகும் அரசியல்
அறிந்தும் அறியாமலும்
ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)

நாடகங்கள்

பலூன்
வட்டம்
எண் மகன்
விசாரணை
சண்டைக்காரிகள்

புதினங்கள்

தவிப்பு

திரைக்கதை

அய்யா(பெரியார் வாழ்க்கை)

குறும்படங்கள்

அய்யா
ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

(நன்றி: விக்கிபீடியா )