Image may contain: 1 person, smilingImage may contain: 8 people, people sitting

இந்திரன் 70 சென்னையில் அக்டோபர் 6ஆம் தேதி  நடைபெற்றது.

அந்த விழாவில் பங்கு கொண்ட நண்பர் மந்திரமூர்த்தி முகனூலில் எழுதியது:

” நேற்று சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலைபண்பாட்டு மையத்தில் பன்முகக் கலைஞரான கவிஞர் இந்திரன் அவர்களுக்கு ‘இந்திரன்- 70’ பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர் இவர். மும்பையில் 70 – வருடங்களில் வங்கியில் வேலை செய்தவர். யார் மீதும் எந்த வருத்தமும் இல்லாதவர் இந்திரன் என்று சிறப்பாகச் சொன்னார் கவிஞா் சிற்பி. மும்பையில் வேலை செய்த காலங்களில் விடுமுறை நாட்களில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞா் இந்திரன், தானும் கூடி தமிழ் இலக்கியங்கள் குறித்து மணிக்கணக்காகப் பேசுவதுவுண்டு என்ற தகவலை மேடையில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் ஞானசேகரன்.

எழுத்தாளர் இந்திரன்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்து முதலில் எழுதியவர். கவிதை தவிர ஓவியம், சிற்பம்,சினிமா என பலவற்றைக் குறித்தும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், இயக்குநர் ஞானசேகரன், சுந்தரபுத்தன், வசந்த் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருமே சிறப்பாகப் பேசினர்.

உரைகளை நண்பர் Shrutitv Che சுருதி டிவியில் காண்க.