மருதகாசி அவர்களின் நூற்றாண்டு விழா !

அவருடைய பல சிறந்த பாடல்களில் ” நீல வண்ணக் கண்ணா வாடா ” என்ற பாடலை இம்மாதத் திரைக் கவிதையாகத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் 

Image result for மருதகாசி

பாடல் : மருதகாசி 

படம் :  மங்கையர் திலகம் 

பாடியவர் : பால சரஸ்வதி  தேவி 

இசை : எஸ் தக்ஷிணாமூர்த்தி

நடிப்பு: பத்மினி 

 

 

நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில்  வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம்   வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான  நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்க  செய்யும்  வாடை  காற்றே
நியாயமல்ல   உந்தன்  செய்கை
தடை  செய்வேன்  தாளை  போட்டு
முடிந்தால்  உன்  திறமை  காட்டு

விண்ணில்  நான்  இருக்கும்  போது
மண்ணில்  ஒரு  சந்திரன்  ஏது
அம்மா  என்ன  புதுமை  இது  
என்றே கேட்கும்  மதியை  பாரு

இன்ப  வாழ்வின்  பிம்பம்  நீயே
இணையில்லா  செல்வம்  நீயே
பொங்கும்  அன்பின்  ஜோதி  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே

புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே