சுஜாதா குவிஸ்

Image result for சுஜாதா

 

  1. சுஜாதாவை வளர்த்த அவரின் அப்பாவழிப்பாட்டியின் முழுப்பெயர் என்ன? (பல இடங்களில் சுஜாதா இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்) 

 

  1. சுஜாதாவின் அப்பா இவரிடம் கேட்கவேண்டும் என்று எழுதிவைத்துக்கேட்கமுடியாமலேயே இ|றந்துவிட்டசப்ஜெக்ட் என்ன? –

 

    3.அந்தக் கேள்வியெல்லாம் நாங்க கேக்கறதிலை” என்னும் அதிர்ச்சி வரிகளுடன் முடியும் சுஜாதாவின் சிறுகதை எது? –

 

  1. லாயர்கணேஷ் தோன்றிய முதல் கதை எது? அடுத்த சில கதைகளில் வரும் அவரின் அஸிஸ்டெண்ட் பெயர் என்ன? –

 

  1. மகாவிஷ்ணுதான் தரிசனம் தர விரும்புகிறாரோ என்று பார்த்தால்” என்னும் சுவாரஸ்ய வரிகளில் தொடங்கி சுஜாதா எழுதினது என்னசப்ஜெக்ட்?

 

  1. சுஜாதா பல இடங்களில் மேற்கோள் காட்டிய பெண் கவிஞர் யார்? –

 

  1. நிம்ஜோஇண்டியன்டிஃபன்ஸ் ஆடுவியா” என்று கேட்கும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா?

 

  1. Dying is an art like everything else I do it exceptionally well –சுஜாதா மேற்கோள் காட்டிய இந்தக்கவிஞர் யார்?  இதை மேற்கோள் காட்ட வேண்டிய உந்துதல் என்னவாக இருக்கும்?

 

  1. சுஜாதாவின்லாண்டரிக்கணக்கில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன? –

 

  1. வட்டநிலாப்பின்னணியில்,வண்ண ஜரிகை நிலத்தில் அந்தத்தோணி அசைந்து அசைந்து வந்தது. எங்கும் இருட்டு. காட்டைப்போல இருட்டு. மசியைப்போல இருட்டு. சாவைப்போல இருட்டு.” – இந்த அபார வரிகள் எந்தக்கதையில் வருகின்றன?

 

  1. சுஜாதா எழுத்தாளர் ஆனபிறகு எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?

 

  1. சுஜாதா – பூர்ணம்விஸ்வனாதன் கூட்டணியில் வந்த முதல் நாடகம்  எது?

 

  1. திராவிடன் பண்டுதானே?அது பிராவிடண்ட பண்ட் , இங்க்லீஷ் பேப்பரை மாவு சலிக்கிறதுக்கு உபயோகப் படுத்தினா அவ்வளவுதான் வரும். இது எந்த நாடகத்தில் வரும் வசனம்?

 

  1. கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் வரும் எதிர்கால மனிதனின் பெயர் என்ன?அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் ?

 

  1. இந்த நாடகத்தைசெட்டுக்கள் ஏதும்  இன்றியே ஒளியால் பிரித்து நடிக்க முன்வந்தாலும் எனக்குச் சம்மதமே ! – சுஜாதா எந்த தன் நாடகத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்?

 

  1. அலன்பெக்கர் எழுதிய டோலரஸ் என்ற நாடகத்தின் பாதிப்பில் சுஜாதா எழுதிய நாடகம் எது?

 

  1. ஜே பிமில்லரின் பிரபல டெலிவிஷன்  நாடகத்தை ஒட்டி எழுதிய நாடகம் எது?

 

  1. சுஜாதா என்கிற ரங்கராஜன்எங்கு பிறந்தார்?

 

  1. முதல் கதை எந்தப் பத்திரிக்கையில் வந்தது?

 

  1. சுஜாதாவுடன் திருப்பூர் கிருஷ்ணன் பணியாற்றியது எந்தப் பத்திரிகையில்?

 

21 . கணையாழியில் சுஜாதா கடைசிப்பக்கத்தை எவ்வளவு காலம் எழுதினார்?

 

22 .   அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு வரியில் சுஜாதாவை ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் யார்?

 

  1. ஒரு நாணயம் (coin) பற்றி சுஜாதா ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எந்த நாணயம் அது?

 

  1. .”என்னே இந்த சமூகத்தின் கொடுமை?”என்று சுஜாதா ஒரு கதையில் எழுதாமல்இருந்ததற்காக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் கதை எது?

 

  1. . “கணவனின் சட்டை என்பதே ஒருகிறக்கத்தைஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள். முதுகுப் பக்கத்தில் லேசான பர்பியூம் வாசனை. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே? ”  இது எந்தக் கதையில் வருகிறது?

 

  1. சுஜாதா எழுதியதிமலா என்ற சயின்ஸ் பிக்‌ஷனில் திமலா எதை உருவகப் படுத்தியிருக்கிறது?

 

  1. .சுஜாதாவின் எந்தக் கதை குமுதத்திலும் பின்னர் குங்குமத்திலும் பிரசுரிக்கப்பட்டது? அதற்கு இலக்கியச் சிந்தனையின் விருது கூட கிடைத்திருக்கிறது. 

 

  1. .விகடனில்வந்த ஒரு கதை டி வியில் நாடகமாக வந்துள்ளது?

 

  1. இந்த கதையைப் படித்து விட்டு,உங்க வீட்டிற்கு (கொல்ல) வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம். எந்தக் கதை ?

 

  1. இலட்சம் புத்தகங்கள் என்கிற சிறுகதை எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது?

 

  1. தலைமைச் செயலகம் என்று எதைப்பற்றி எழுதினார்?

 

  1. சுஜாதாவின் கருப்பு வெளுப்பு சிவப்பு கதையின் speciality என்ன?
  2. எமர்ஜென்ஸிபற்றி சுஜாதா பாடிய நேரிசை வெண்பாவின் முதல் சொல் எது ? 

 

  1. . சிறுவர் இலக்கிய வரிசையில் சுஜாதா எழுதிய நாவல் எது ?

 

  1. எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாதது மாதிரி நடிக்கும் சுஜாதாவின் பிரபலமானஜோக்கில்வரும் நாடு எது? 

 

  1. சுஜாதாவின் கோணல் பார்வை என்று அவரை விமர்சித்து புத்தகம் போட்ட எழுத்தாளர் யார் ? 

 

  1. ஓலைப்படாசுஎன்ற கதையின் மெயின் தீம் என்ன ? 

 

  1. சுஜாதாவின் முதல் நாவல் எது?

 

  1. . சுஜாதா தயாரித்த தமிழ்ப் படம் எது?

 

  1. சுஜாதாவின் எந்தத் தொடர் கதைக்காக அவருக்குகட்-அவுட்வைத்தார்கள்? 

 

  1. பத்துசெகண்ட்முத்தம் எதைப்பற்றி? 

 

  1. 14 நாட்கள் எதைப் பற்றி?

 

  1. சுஜாதா எழுதியஒரெழுத்துநாவலின் பெயர் என்ன? 

 

  1. சுஜாதாவுக்குத்தமிழில் பிடித்த 6 வார்த்தைக் கதை? 

 

  1. சுஜாதா ஒரு நடிகர்-நடிகைதிருமணத்திற்குசென்று எடுத்த போட்டோ கற்றதும் பெற்றதுமில் வந்திருக்கிறது. யார் அவர்கள்?                                 
  2. காகித சங்கிலிகள் என்ற நாவல் எந்த வியாதியை அடிப்படையாக வைத்து எழுதியது?

 

  1. கொலையுதிர்காலத்தில் சுஜாதா பயன்படுத்திய விஞ்ஞானக் கோட்பாடு எது? 

 

  1. கணையாழியில் சுஜாதா எழுதிய

 “பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்

 முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி

 பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர

 வேண்டாம் வரதட் சணை.”

என்ற வெண்பாவிற்கு  ஈற்றடி கொடுத்தவர் யார்? 

 

  1. கதை கட்டுரை தவிர முவரதராசனார்– சுஜாதா இருவருக்கும் உள்ள ஒருஒற்றுமை என்ன? 

 

50 நைலான் கயிறு கதையில் டெலிபோன் எண்ணின்  முடிச்சை அவிழ்ப்பது எது?